ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வக்காலத்து வாங்கியுள்ளார். கடுமையான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை சிறையில் அடைக்க உத்தரவிடாமல் பிணையில் விடுவித்தது ஏன் என, பிணை வழங்கிய நீதிபதி அறிக்கை அளிக்கு மாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலை யில், ஜெகநாதனுக்கு அண்ணாமலை நற்சான்றி தழ் வழங்கியுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு களைப் பயன்படுத்தி பல்கலைக்கழக வளாகத் திற்குள்ளேயே தனியார் நிறுவனம் தொடங்கி யது மற்றும் பட்டியலினத்தவர் மீதான வன் கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இதனால் சேலத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டு விட்டதாகக் குதிக்கிறார். இவரே நீதிபதியாக மாறி அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யா னவை என்று கூறியுள்ளார்.
முகாந்திரமே இல்லாத வழக்கு என்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சில பேராசிரி யர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேலு தலைமறைவாகியுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன் பல்வேறு தரு ணங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதர வாக நடந்து கொண்டதை இணைத்துப் பார்த்தால் தான் அண்ணாமலையின் அவசரத் தீர்ப்பை புரிந்து கொள்ள முடியும். மறுபுறத்தில் சேலம் மாவட்ட பாஜக தலைவர் குணசேகரன் என்பவர் பட்டியலின விவசாயிக ளின் நிலத்தை அபகரிக்க உதவியாக அமலாக் கத்துறை செயல்பட்டதை மாநிலத் தலைவர் அண்ணாமலை பூசிமெழுகியுள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குணசேகரன் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரது நிலத்தை போலிப் பத்திரம் மூலம் அபகரிக்க முயன்றுள்ளார். அவர்கள் மறுக்கவே, அமலாக்கத்துறை அதி காரிகள் அந்த விவசாயிகள் மீது வழக்கு தொ டுத்துள்ளனர். காட்டெருமையைக் கொன்று புதைத் ததாக சொல்லப்பட்ட புகாரில் பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு என்ன வேலை? அந்தத்துறை மோசடி செய்யும் பாஜகவின் உப பிரிவுகளில் ஒன்றாக மாறி விட்டதா என்ற கேள்வியும், போராட்டமும் எழுந்த நிலையில், விவசாயிகள் மீதான வழக்குகளை அமலாக்கத்துறை கைவிட்டுள்ளது. ஆனால் தனது கட்சிக்காரரையும், அமலாக்கத்துறையை யும் அண்ணாமலை நியாயப்படுத்துகிறார்.
இந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் லட்சணத்தை தமிழ்நாடு தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.