மணிப்பூர் மாநிலம் பற்றி எரியக் காரண மாக இருந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது வர வேற்கத்தக்கது. ‘மெய்டெய்’ இன மக்களுக்கு ‘பழங்குடி அந்த ஸ்து’ வழங்கும் விவகாரத்தில், நான்கு வாரங்க ளில் உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் கடந்தாண்டு மார்ச் மாதம் மணிப்பூர் பாஜக அரசுக்கு உத்தர விட்டிருந்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தன.
அது படிப்படியாக வன்முறையாக மாறி கலவரமாகப் பரவியது. மெய்டெய் மக்களுக்கு ‘பழங்குடி’ அந்தஸ்து வழங்கக் கூடாது என்று குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிப் பிரிவினரும்; வழங்கவேண்டும் என்று மெய்டெய் பிரிவினரும் வன்முறையில் ஈடுபட்ட தால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஆயி ரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா யினர். மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது.
ஒன்றிய ரிசர்வ் படை, ராணுவம் வரவழைக் கப்பட்டபோதிலும் இன்றுவரை அம் மாநிலத் தில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மட்டுமல்ல மாநில முதலமைச்சரே வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அம்மாநில பாஜகவே இரண்டாகியுள்ளது. மறுபுறம் மணிப்பூரில் குக்கி இனத்தவர் நிறைந்துள்ள பகுதிகளில் நிவாரண முகாம்க ளில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு வழங்கப் படும் உணவுப் பொருட்களை ஒன்றிய அரசு நிறுத்தியதற்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
காவல்துறையினருக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. இது தான் பாஜக ஆளும் சிறிய மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலை. வன்முறையைத் தூண்டிவிட்ட பாஜக அரசே அதற்கு இரையாக வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்களும் கிறிஸ்து வர்களும் சமநிலையில் உள்ள மணிப்பூர் மாநி லத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தால்தான் தடையின்றி தனது மதவெறி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று பாஜக கருதுகிறது.
அசாம், ஜம்மு-காஷ்மீர் என பாஜக ஆட்சியில் இருக்கிற அல்லது ஒன்றிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் அதற் கேற்ப சட்டமன்றத் தொகுதிகளையும் மறுவரை யறை செய்து வருகிறது. அரசியல் ஆதாயத்திற் காக பாஜக அரசுகள் மேற்கொள்ளும் இத்த கைய சட்டவிரோதச் செயல்கள் ஆபத்தா னவை. மக்கள் ஒற்றுமையையும் மத நல்லிணக் கத்தையும் சீர்குலைக்கக்கூடியவை. எனவே பாஜகவின் பிளவுவாத அரசியலை நாட்டு மக்கள் புறந்தள்ள வேண்டும்.