குஜராத் வன்முறையின்போது பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் அரசினால் குற்றவாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதி மன்றம் ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். சமீபத்திய சில வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகள் எதிர்மறையான விமர் சனங்களை உருவாக்கிய நிலையில், இந்தத் தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வ ராகவும், அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் குஜ ராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தால் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 14 பேர் படுகொலை செய்யப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக குஜராத் அரசு நடந்து கொண்ட நிலையில் வழக்கு விசாரணை மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்தேதி சுதந்திர தினத்தின் போது குற்றவாளிகள் மன்னிப்பு கோரிய மனுவை ஏற்றுக் கொண்டு குஜராத் அரசு அனை வரையும் விடுதலை செய்தது. இது நாடு முழுவ தும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வாயம் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது. உண்மைகளை குஜராத் அரசு புறக்கணித்துவிட்டதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. மராட்டிய மாநில நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யும் அதிகா ரம் குஜராத் அரசுக்கு இல்லை என ஓங்கி குட்டி யுள்ளது உச்சநீதிமன்றம். நீதிக்காக நெடிய போராட்டத்தை நடத்திய பில்கிஸ் பானுவின் மனஉறுதி பாராட்டத்தக்கது. துணைநின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி களின் ஆதரவு போற்றத்தக்கது. நீதி நீண்ட தாம தத்திற்குப் பிறகு நிலைநாட்டப்பட்டுள்ளது.