headlines

img

மோடி ஆட்சியில் மனித உரிமைகள்: பேரா.சாய்பாபா மரணம் ஒரு சாட்சி!

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு, இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த  கருங்கறையாகும். இது வெறும் ஒரு தனிமனிதரின் இழப்பல்ல; நமது நாட்டின் நீதி அமைப்பின் சீரழிவையும், மோடி அரசின் மனித உரிமை மீறல்களின் உச்சகட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் சோக நிகழ்வாகும்.

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு, இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த  கருங்கறையாகும். இது வெறும் ஒரு தனிமனிதரின் இழப்பல்ல; நமது நாட்டின் நீதி அமைப்பின் சீரழிவையும், மோடி அரசின் மனித உரிமை மீறல்களின் உச்சகட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் சோக நிகழ்வாகும்.

நீதிக்காகப் போராடிய ஓர் அறிவுஜீவியின் வாழ்க்கை இவ்வாறு கசப்பான முடிவுக்கு வந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சித்திர வதைகளை எதிர்கொண்டும், தன் கொள்கை களில் உறுதியாக நின்ற சாய்பாபாவின் துணிச்சல் போற்றுதலுக்குரியது. அவரது மரணத்திற்கான முழுப் பொறுப்பும் மோடி அரசே ஏற்கவேண்டும்.

மனித உரிமைகள், சமூக நீதி என்ற பெயரில் மோடி அரசு பேசும் அனைத்தும் வெறும் வெற்று வார்த்தைகளே என்பதை சாய்பாபாவின் வாழ்க்கையும் மரணமும் நமக்குத் துல்லியமாகக் காட்டுகின்றன. சர்வதேச ஒப்பந்தங்களையும், உள்நாட்டுச் சட்டங்களையும் மீறி, ஒரு மாற்றுத் திறனாளியை இவ்வளவு கொடூரமாக நடத்திய அரசு, மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது.

இந்த அரசின் கீழ், கருத்து சுதந்திரம் என்பது  வெறும் கற்பனையாகிவிட்டது. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் அனைவரும் தேசத்துரோகி களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, சிறையில் அடைக்கப் படுகின்றனர். சாய்பாபா, வரவர ராவ், சுதா பரத்வாஜ்  போன்ற அறிவுஜீவிகளின் வாழ்க்கையே இதற்குச் சாட்சி.

சாய்பாபாவின் மரணம் நம் ஒவ்வொருவரை யும் சிந்திக்க வைக்க வேண்டும். மோடி ஆட்சி யில் நடக்கும் கொடூரங்களை எதிர்த்துக் குரல்  கொடுக்க வேண்டும். மாற்றுக் கருத்து கொண்ட வர்களை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களு டன் உரையாட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

இந்த அரசின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீதித்துறை சுதந்திர மாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவின் ஜனநாயகம் வெறும் பெயரள விலேயே இருக்கும்.

மோடி அரசே,  மக்களின் உரிமைகளை மதியுங்கள். ஜனநாயகத்தை உண்மையான பொருளில் நடைமுறைப்படுத்துங்கள். இல்லை யெனில், வரலாறு உங்களை மன்னிக்காது.