தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் செயல் தலைவர் போலவே செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். நாள் தவறினாலும் மேடை தவறுவ தில்லை. ஏதாவது ஒரு நிகழ்வில் கலந்து கொள் வதையும் அதில் பாஜகவின் சனாதன கொள்கைக்கு வக்காலத்துவாங்குவதையும் தவற விடுவதில்லை.
ஞாயிறன்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகக் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியல் சட்டத்தில் கூறப் பட்டுள்ள ஆன்மீகம் பற்றி இளைஞர்கள் மக்க ளுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பட்டமான, ஆர்எஸ்எஸ் பிரச்சாரமாகவே அவரது பேச்சு அமைந்துள் ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் துவக்கத் திலோ இடையிலோ வேறெங்குமோ தெய்வத்தின் பெயரால் என்றோ மதத்தின் பெயரால் என்றோ குறிப்பிடப்படாததே அதன் சிறப்பு. அதுவே அதன் மதச்சார்பற்ற தன்மையை தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் இந்துத்துவா-ஆர்எஸ் எஸ் பரிவாரங்கள் மட்டுமே மதச்சார்பின்மை என்ப தற்கு புதுவிதமாக மதச்சார்பான விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அரசுக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலை தான் மதச்சார்பின்மை என்பதை போலி மதச் சார்பின்மை என்று பாஜக தொடர்ந்து தனது மதவெறிக் கண்ணோட்டத்துடன் கூறி வருகிறது. அதையே ஆளுநர் ஆர்.என்.ரவியும் எதிரொ லிக்கிறார்.
அவர் பாஜக தலைவராக பேசினால் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஆளுநர் பதவியில் இருக்கும் போது அரசியல் சட்டத் தின் மாண்புகளுக்கும் அதன் ஷரத்துகளுக்கும் விரோதமாகப் பேசக்கூடாது. ஆனால் ஆளுநரோ அரசியல் சட்டத்தில் ஆன்மீகம் பற்றி கூறப்பட்டி ருப்பதாகவும் அதை இளைஞர்கள் மக்களி டத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறுவது அரசியல் சட்டமீறல்.
இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களி டையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால் ஆளுநரோ அதற்கு எதிராகவே பேசியிருக்கிறார். ஒரு வேளை இவரும் இவரது எஜமான அமைப்பான ஆர்எஸ் எஸ்-சும் தூக்கிப் பிடிக்கும் மனுஸ்மிருதியைத் தான் அரசியல் சட்டம் என்று கூறுகிறார் போலும்.
இந்திய நாட்டு மக்களின் அமைதியான, சமத்து வமான, சுதந்திரமான வாழ்க்கையை உத்தரவா தப்படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கும் இந்துத் துவா மதவெறிக் கும்பலின் சதிச் செயல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவ தற்காக துணிந்து பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஆர்.என்.ரவியை அம்பலப்படுத்துவது அவசியம்.