என்னைப் பொறுத்தவரை மொழித் திணிப்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னை யில் செவ்வாயன்று கல்விச் சிந்தனை அரங்கு எனும் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசி யுள்ளார். ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு நடை முறைப் படுத்திவரும் கொள்கை அதற்கு நேரெதி ராக உள்ளதை மறைக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசின் தலைமைபீடமான ஆர்எஸ்எஸ்-சின் கொள்கையையும், நடைமுறை களையும் அமல்படுத்திட ஒரு திட்டத்தைத் தயா ரித்து அதற்கு தேசிய கல்விக் கொள்கை என்று பெயரிட்டுள்ளனர். அதனை மாநில அரசுகளு டன், கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் ஆதிக்க மனப்பான்மையுடன் பகுதி பகுதியாக ஏதாவது ஒரு புதிய பெயரிலும் வடிவி லும் அமல்படுத்தி வருகின்றது ஒன்றிய பாஜக அரசு.
இந்தக் கொள்கையின்படி, மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியை மறந்துவிட்டு இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றையே படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேட்டால் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூன்று மொழி களைக் கற்கும் திறனுடையவர்கள் என்று கல்வி யாளர்கள் கூறியிருக்கிறார்கள் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் கதையளக்கி றார்கள்.
தாய்மொழிக் கல்வியே மாணவர்களின் கல்வி யையும், சிந்தனைகளையும் மேம்படுத்தும். தெளி வான மனநிலையில் சிறந்த ஆற்றலோடு குழந்தை கள் கல்வியை கற்பர். அதுவே மனவளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் உலகில் சிறந்த கல்வியாளர்கள் பலரும் தாய்மொழி வழிக் கல்வி யையே சிறந்தது எனக் கூறியுள்ளனர். ஆனால் இந்துத்துவாவாதிகளான ஒன்றிய ஆட்சியா ளர்களின் கருத்தும் கல்விக் கொள்கையும் அதற்கு நேர்மாறாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி பிறமொழிகளைக் கற்பது வளர்ச்சிக்குப் பயன்படும் என்று கோரஸ் பாடு கிறார்கள். அந்த வாதத்தையே குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் வேறு வார்த்தை களில் கூறுகிறார். நான் தாய்மொழியில் தான் கல்வி பயின்றேன் என்றும் பிறமொழிகளைக் கற்று கொள்வது வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி யிருக்கிறார். அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை இளம் குழந்தைகளின் மூளைக்குள் திணிக்கும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு வக்கா லத்து வாங்கியிருக்கிறார்.
வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தென் மாநில மொழிகளை கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் தென்மாநிலங்களில் பெரும்பாலும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுக்கிறார்கள் என்று இதே கருத்தரங்கில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் இந்தி புகுத்தப்படுவதால் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் மட்டுமே அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைகிறார்கள் என்று அதற்கு பதில் கூறியிருக்கிறார் என்பது மனதில் கொள்ளத் தக்கது.