headlines

img

குஜராத்தில் குட்டையை குழப்பும் பாஜக

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டவுடன் நடத்தைவிதிகள் நடை முறைக்கு வந்துவிடும். ஆனால் அதற்குள் பாஜக தலைமையிலான மாநில அரசு மதப் பகைமையை முடிந்தவரை விசிறிவிடமுனைகிறது.

குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் இதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். 

பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக  அரசு மீது குஜராத் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை திசைதிருப்ப பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அந்த மாநிலத்தை சுற்றி சுற்றி வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சிதான் உள் ளது. தங்களது ஆட்சியின் சாதனைகள் என்று அவர்களால் எதையும் கூறமுடியவில்லை. மாறாக அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்தது போன்றவற்றையே பேசுகின்றனர். 

மாநில பாஜக அரசு தனது பங்கிற்கு பொது சிவில் சட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறி  அதற்கு குழு அமைக்க உள்ளது. உத்தர்கண்ட்,  இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநி லங்களின் பாஜக அரசுகளும் இதையே கூறி வருகின்றன. மாநில அரசுகள் பொது சிவில் சட்ட த்தை தனித்தனியாக கொண்டுவரலாம் என்று  பாஜக கூறுகிறது. ஒன்றிய அளவில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்தும் பாஜக வினர் அவ்வப்போது பேசி வருகின்றனர். 

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற் காகவே பொதுசிவில் சட்டத்தை தாங்கள் கொண்டுவர முயல்வதாக அவர்கள் பேசுவது வெறும் பம்மாத்தே ஆகும். பெண்கள் குறித்த  மிகவும் பிற்போக்கான பழமைவாத கண்ணோட்டத்தையே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரிவாரம் கொண்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. 

பாபர் மசூதியை இடித்து அயோத்தியில் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திற்கான 370வது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்பதெல் லாம் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி. இதைத்தான் நடைமுறைப்படுத்த பாஜக முயல்கிறது. 

பணவீக்கம், வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல், கேஸ் விலை உயர்வு,  ஜிஎஸ்டி வரி போன்றவற்றிலிருந்து மக்களின் கவ னத்தை திசைதிருப்ப பாஜக செய்யும் சித்து வேலைகளில் ஒன்றுதான் பொதுசிவில் சட்டம் என்பது. தேசத்தின் கவனத்தை திசைதிருப்ப மதவெறி அரசியலை தொடர்ந்து முன்னெடு க்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.