இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்த கத்தை காரணம் காட்டி(மிரட்டி) முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 38 நாட்களில் 15 முறை தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை இந்திய பிரதமர் மோடி ஒரு முறை கூட அதை நேரடியாக மறுக்கவில்லை. மாறாக பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசீம் முனீரை வெள்ளை மாளிகை அழைத்து விருந்து கொடுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் மோடி டிரம்பை அழைத்து 35 நிமிடம் பேசினார் என்று நமது வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் இந்தியாவின் மரியாதையை சர்வதேச அரங்கில் உயர்த்துவதற்கு உதவாது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, அணிசேராக் கொள்கையை பின்பற்றி வந்தது. இது பனிப்போர் காலத்தில் இந்தியாவிற்கு சுதந்திரமான வெளி யுறவுக் கொள்கையை உருவாக்க உதவியது. இது இறையாண்மை, காலனியாதிக்க எதிர்ப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தியது. 1947 இல் பாலஸ்தீனத்தை பிரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தை எதிர்த்த சில நாடு களில் இந்தியாவும் ஒன்றாகும். 1974 இல் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) மற்றும் 1988இல் பாலஸ்தீன அரசு ஆகியவற்றை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஆனால் இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற 2014 க்கு பின்பு ஒன்றிய பாஜக அரசு இந்த பாரம் பரிய கொள்கையில் இருந்து விலகி அமெரிக்க- இஸ்ரேல் சார்ந்த ஒரு வலதுசாரி வெளியுறவு கொள் கையை பின்பற்றி வருகிறது. இந்தியாவின் “அண்டை நாடுகளுடனான நல்லுறவு’’ கொள் கையும் பெரும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. இலங்கை, நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம் போன்ற நாடுகளுடனான உறவும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தியா கலந்து கொள்ளாமல் இருந்தது. அதே நேரத்தில் இஸ்ரே லுக்கான தனது ஆதரவை மறைமுகமாக தெரி விப்பதாகவே உலகநாடுகள் பார்க்கின்றன. இத னால் அரேபிய நாடுகளில் 2014 இல் இந்தியாவின் மீது 73 சதவிகிதமாக இருந்த நன்மதிப்பு 34 சதவிகித மாக குறைந்திருக்கிறது. ஆப்பிரிக்க ஒன்றிய நாடு களில் 68 சதவிகிதமாக இருந்தது 41 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளில் 89 சதவிகிதமாக இருந்தது தற்போது 23 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் குறுகிய காலத்தில் சில நன்மைகளைத் தருவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டாலும் நீண்ட காலத்தில் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள நேரிடும். பாரம்பரிய அணிசேரா கொள்கை இந்தியாவிற்கு உலக அரங்கில் தனித்துவமான இடத்தை வழங்கியது. அந்த கொள்கையில் இருந்து விலகியதால், பல நாடுகளின் நம்பிக்கையையும் இழக்க நேரிட்டி ருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவை மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியிருக்கிறது.