tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஊதிய உயர்வு கேட்டு செல்போன் டவர் மீது ஏறி ஒப்பந்த பணியாளர் போராட்டம்

நாமக்கல், ஜூன் 19- ஊதியர் உயர்வு வழங்க வேண்டும், என வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், காவேட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் நாமக்கல் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியா ளராக குடிநீர் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு  மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேசம யம் இவருடன் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் தனக்கு சம்பளம் குறைவாக இருப்பதாகக்கூறி, புதனன்று இரவு  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள செல்போன்  டவரில் ஏறி, பாபு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீசார் மற்றும் பாபுவின் உறவினர்கள், பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்த னர்.

குடியிருப்பிற்குள் நுழைந்த ஒற்றை யானை

கோவை, ஜூன் 19- தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து சுற்றி வரும் ஒற்றை யானை, புதனன்று இரவு நரசிபுரம் பகுதியில் உள்ள  ஒரு வீட்டிற்குள் புகுந்து பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி யது. கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் தற்போது புற்கள் செழித்து வளர்ந்து வருவதால் வனவிலங்குகளுக்கு தேவை யான உணவு கிடைத்து வந்தாலும், ஒரு சில யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக  ஒரு ஒற்றை யானை சுற்றித் திரிந்து வருவது அப்பகுதி மக்க ளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த  யானை இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளை குறி வைத்து வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ரேசன் அரிசி மற்றும் கால்நடை தீவனங்களை உண்டு வருகிறது. இந்நிலையில், புதனன்று அதிகாலை நரசிபுரத்தை அடுத்த வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் பகுதியில் உள்ள விவசாயி பாலு என்பவரது வீட்டில் ஒற்றை யானை  நுழைந்தது. வீட்டின் காம்பவுண்ட் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற யானை, வீட்டின் முன்பு வைக்கப் பட்டிருந்த தவிடு மற்றும் நிலக்கடலையை தின்றுள்ளது. வீட்டின் வாயிலில் யானை நிற்பதைக் கண்ட பாலுவின் உறவி னர்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக போளுவாம் பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பாலுவின் வீட்டிற்கு அருகே வந்தபோது வனத்துறையின் ஜீப் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாகனங்களில் உதவி செய்து யானையை விரட்டினர். தற்போது, இந்த யானை வீட்டுக்குள் செல்லும் சிசிடிவி காட்சி கள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா விற்பனை

கோவை, ஜூன் 19- கோவையில் தனியார் கல்லூரி மைதானத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 4  பேரை கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அப்பகு தியில் சோதனை நடத்தினர்.  அப்பொழுது மைதானத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட் டது. அதனை கைப்பற்றி காவல் துறை நடத்திய விசா ரணையில், அருகில் குடியி ருந்து எலக்ட்ரீசியன் வேலை  செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த  மிருத்யுஞ்சயரனா, உடை யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜான் பெட்டர், போத் தனூர் கணேசா புரத்தைச் சேர்ந்த முத்து ஆகியோர் நான்கு பேர் கஞ்சா விற்ப னையில் ஈடுபட்டது தெரியவந் தது. தொடர்ந்து அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மூதாட்டி புகார்

நாமக்கல், ஜூன் 19- தனது சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய தாகக்கூறி மூதாட்டி ஒருவர் காவல் நிலை யத்தில் புகாரளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் ரத்தினம். தனது கணவரின் உடல்நிலை பாதிப்பால் கோவையில் தங்கி யுள்ளார். இந்நிலையில், தனது கணவர் ஆறு முகத்தின் மருத்துவச் செலவிற்காக தனக்கு சொந்தமான வீட்டை அடகு வைத்து, பணம் பெறுவதற்காக குமாரபாளையத்தில் ஆவண எழுத்தர் சக்திவேல் என்பவரை நாடியுள் ளார். கடந்த மாதம் சக்திவேல் ரத்தினத்தை  வரவழைத்து, அடமானத்திற்கு பணம் தருவ தாகக்கூறி பத்திரங்களில் கையெழுத்து பெற்று, அதனை செந்தாமரை என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதன் பின் ரத்தினத்திற்கு 2.50 லட்சம் ரூபாய்  வழங்கி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், ரத்தினம் வீட்டை சக்திவேல் 20 லட் சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது ரத்தி னத்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சக்திவேலை தொடர்பு கொண்ட பொழுது,  அவர் பேச மறுத்துள்ளார். இதனால் தன்னை ஏமாற்றி சக்திவேல் தனது வீட்டை விற்பனை செய்ததுடன், வீட்டை விற்பனை செய்து தனக்கு தர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றியதாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் ரத்தினம் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர். இதனிடையே, தப்பியோடிய சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைக்கடை பணியாளர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சேலம், ஜூன் 19- நகைக்கடையில் பணிபுரிந்தவரை தாக் கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் பணிபுரிந்து வந்த சுரேஷ்  குமார் (24), மகேஸ்வரன் (24) ஆகியோர்,  கடையிலிருந்து சுமார் 440 கிராம் எடை  கொண்ட நகைகளை திருடியுள்ளனர். இதனை கண்டுபிடித்த நகைக்கடை உரிமை யாளர் ரவிச்சந்திரன் புதனன்று காலை விசா ரணை செய்து கொண்டிருந்தபோது, சுரேஷ் குமாரின் ஆதரவாளர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை ரவிச்சந்தி ரன், அவரது மகன் ஆகாஷ் (29), யுவராஜ் (23), கார்த்திக் (30), பிரவீன்குமார் (24) ஆகி யோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைய டுத்து நகை திருடியவர்களை காவல் நிலை யத்தில் ஒப்படைக்காமல் தன்னிச்சையாக விசாரித்து தாக்கிய ரவிச்சந்திரன், ஆகாஷ்  உட்பட 5 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.