headlines

img

வாய்ப்பந்தல் நிழல் தராது!

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடு இந்தியா. பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஒன்றிய நிதி அமைச்சர் துவங்கி, குடி யரசு துணைத்தலைவர் வரை கூறி வருகின்ற னர். இந்தியா பாய்ச்சல் வேகத்தில் பொருளாதா ரத்தில் வளர்ந்து வருவதாக ஒரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கள எதார்த்தம் தலைகீழாக இருக்கிறது. சர்வதேச பொருளாதார ஆய்வு நிறு வனமான நொமுரா உலகளாவிய பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியா தப்பிக்க முடியாது; கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் என எச்சரித்திருக்கிறது. அதன் தாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022இன் நான்காம் காலாண்டில் எதிரொலித்திருக்கிறது. மூன்றாம் காலாண்டில் 6.3 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, நான்காம் காலாண்டில் 4.4 சதவிகிதமாகக் குறைந் திருக்கிறது. இது இருக்கும் நிலையை மேலும் மோச மாக்கும் என்கிறது நொமுராவின் ஆய்வறிக்கை.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி மாதம் 7.14 சதவிகிதமாக இருந்தது. பிப்ரவரி மாதம் 7.45 சதவிகிதமாக உயர்ந்திருக்கி றது. குறிப்பாக கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.48 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிக ரித்திருக்கிறது.  இந்த தேக்க நிலை இந்தியாவில் வறுமையையும், துன்பத்தையும் மேலும் அதிக ரித்திருக்கிறது.

2008 மற்றும் 2019 இல்  ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் போது உள்ளாடைகளின் விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதே போல் தற்போதும் உள்ளாடைகளின் விற்பனை 55 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரம் கடும் தேக்கநிலையில் இருப்பதன் அறிகுறியாகும். ஆனால் இந்தியப் பொருளாதா ரம் முதலிடத்தை நோக்கிச் செல்கிறது எனப் பொய் பொங்கல் வைக்கிறது. 

2022ஆம் ஆண்டு  ஆசியப் பிராந்தியத்தில் டாலருக்கு நிகராக அதிகமாக வீழ்ச்சியடைந்த  நாணயம் இந்திய ரூபாய்தான். 2022-ஆம்  ஆண்டில்  மட்டும் 11 சதவிகிதம் வீழ்ச்சியடைந் தது. 2021இல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.33 பைசாவாக இருந்தது. தற்போது ரூ.82.59 பைசாவாக மேலும் வீழ்ச்சியடைந்திருக்கி றது. இந்த லட்சணத்தில் எப்படி பொருளாதார வளர்ச்சி யில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்க முடியும்? காவி கார்ப்பரேட்களின் கூட்டுக்களவாணி முத லாளித்துவ வளர்ச்சியையே இந்தியாவின் வளர்ச்சி யாக மோடி அரசு கட்டமைத்து வருகிறது.

வாய்ப்பந்தல் ஒருபோதும் நிழல் தராது. பொய்யும், புரட்டும் ரொம்பநாள் தாங்காது. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ் தானின் இன்றைய நிலை அதற்குச் சாட்சி.  தனி யார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை வழியில் கண்மூடித்தனமாகச் சென்றதன் விளைவை இன்று பாகிஸ்தான் அனுபவிக்கிறது. அதே வழி யில் செல்லும் மோடி ஒருநாள் இந்தியாவைப் பாகிஸ்தானாக மாற்றினாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.