headlines

img

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள் ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், அதிமுக முன் னாள் நிர்வாகி சைதை துரைசாமியும் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் சென்றனர். மூன்று மணி நேரம் நீடித்த இந்த ‘ரகசிய’ பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியே வந்த குருமூர்த்தி, செய்தியாளர்களி டம் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்.

“எனக்கு அன்புமணி இங்கே வந்ததே தெரி யாது. பாஜகவிற்காக நான் இங்கு வரவில்லை. ராமதாஸ் என்னுடைய நீண்ட நாள் நண்பர், அவரை சந்தித்துப் பேசவே வந்தேன்” என்று கூறிய அவர், “பிரச்சனை இருக்கும் இடத்திற்கு நான் செல்லவில்லை, நான் இருக்கும் இடத்திற்குத்தான் பிரச்சனை தேடி வருகிறது” என்று குதர்க்கமாக பதிலளித்தார்.

குருமூர்த்தியின் கூற்றுப்படி, இது ஒரு ‘தற்செயலான நட்பு சந்திப்பு’. ஆனால் அர சியல் வட்டாரங்கள் இதை வேறு விதமாகவே பார்க்கின்றன. பாஜக கூட்டணியை விரும்பாத ராமதாஸை சமாதானப்படுத்த, தங்களின் ‘நம்பகமான’ நபர்களை பாஜக அனுப்பியுள்ள தாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அன்புமணி தைலாபுரம் சென்று ராமதாஸை சந்தித்து 45 நிமிடம் பேசிய  பின், வெளியில் எதுவும் பேசாமல் கிளம்பினார். 

பாமக குடும்ப பிரச்சனை பாஜக கூட்டணியின் நலனை பாதிக்கக்கூடும் என்ற கவலையில்  இந்த மத்தியஸ்த முயற்சியை பாஜக எடுத்திரு க்கலாம் என்ற கருத்து ஒருபுறம் வெளிப்படுத்தப் பட்டாலும், தனது அரசியல் சதுரங்கத்தை அரங்கேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கூட பாஜக இதை அணுகலாம் என்றே தெரிகிறது;

அதாவது, பாமகவை ராமதாஸிடம் இருந்து முழுமையாக கைப்பற்றி அன்புமணியிடம் தரு வது; பின்னர் அன்புமணியையே கைப்பற்றுவது; பின்னர் பாமகவையே பாஜகவாக மாற்றுவது; இதன் மூலம் சாதிய பலம் கொண்ட கட்சியாக தன்னை வலுப்படுத்திக் கொள்வது என்ற குறுக்கு  அரசியல் - குதர்க்க அரசியல் உத்தியை பாஜக திட்டமிட்டுள்ளது என்றே தெரிகிறது.

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று கூறினாலும், பாஜக தரப்பின் அக்கறைக்கு காரணம் வேறு எதுவும் இல்லை.

இந்த ‘மத்தியஸ்த’ முயற்சிகள் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறி. ராமதாஸ்-அன்புமணி மோதல் வெறும் தனிப்பட்ட விவகாரம் மட்டு மல்ல, அது கொள்கை ரீதியான மாறுபாடுகளை யும் உள்ளடக்கியது. பாஜக கூட்டணி விவகா ரத்தில் இருவருக்குமிடையே அடிப்படை கருத்து வேறுபாடு உள்ளது. பாமக குடும்ப பிரச்சனை யில் பாஜக “குதிருக்குள் இல்லை” என்று கூறினாலும், ‘குதிரையைச்’ சுற்றி அலைந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.