tamilnadu

img

CLAT தேர்வு: மாநில அளவில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவர்

தமிழகத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பழங்குடியின மாணவன் என்ற சாதனையை படைத்துள்ளார் பழங்குடியின மாணவர் பரத்.
திருச்சியில் உள்ள பச்சமலை தோனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் CLAT நுழைவுத் தேர்வில் எஸ்.டி பிரிவில் 964ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் பச்சமலைப் பகுதியில் CLAT தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை-யில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.