வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை யொட்டி அங்கு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம், நூலகத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் “மாநிலங்களின் உரி மைகள் மீது தொடர்ந்து அத்துமீறல் நடந்து வரும் நிலையில் மாநிலங்களுக்கு இடையே ஒத்து ழைப்பை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் எல்லை கடந்த சக வாழ்வை யும், ஒத்துழைப்பையும் பார்த்தோம். கேரளமும், தமிழகமும் இத்தகைய சக வாழ்வையும், ஒத்து ழைப்பையும் தொடர்கின்றன” என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வைக்கம் போராட்டம் என்பது ஆலய நுழைவு போராட்டமோ, கருவறை நுழைவு போராட்டமோ கூட அல்ல, கோவில் இருந்த தெருக்களில் கூட ஒடுக்கப்பட்டவர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டி ருந்த தடையை எதிர்த்து நடைபெற்ற சமூக நீதிக் கான போராட்டமாகும். இந்த கொடூரமான தடை அவ்வளவு எளிதில் விலகிவிடவில்லை. நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
கடந்தகாலத்தில் இவ்விரு மாநிலங்களும் தீண்டாமைக் கொடுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளாகும். இதற்கு ஒரு உதாரணம்தான் தோள் சேலை போராட்டமாகும். இந்த மகத்தான போராட்டத்தின் இருநூறாவது ஆண்டு விழாவை கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அந்த விழாவிலும் தமிழக, கேரள மாநில முதல்வர்கள் பங்கேற்றது சிறப்புக்குரியது.
தமிழ்நாடும், கேரளமும் சமூகநீதிப் பாதையில் வெகுதூரம் முன்னேறியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த இரண்டு மாநிலங்களி லும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு நடைமுறை க்கு வந்துள்ளது. இது ஒரு முக்கியமான முன் னேற்றம். என்றாலும் நடைமுறையில் இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறி இசைஞானி இளையராஜா, ஜீயர் உள்ளிட்டவர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது இதுவும் தீண்டாமைக் கொடுமையின் ஒரு வடிவமே ஆகும். ஆனாலும் ஏதோ நிர்ப்பந்தத்தால் இசைஞானி இளையராஜா இதைமறுத்தாலும் காணொலிக் காட்சியும் அறநிலையத் துறையின் விளக்கமும் மறைக்க முடியாத சாட்சியாகவே உள்ளது. ஆகமம், விதி, மரபு என்ற பெயரில் சாதிய அடுக்கு நியாயப்படுத்தப்படுவதை ஏற்க முடி யாது. சமூக நீதிப் போராட்டம் அனைத்துத் தளங்களிலும் தொடர வேண்டியுள்ளது.