headlines

img

வரவேற்கத்தக்க முதல்வரின் தனித் தீர்மானம்

சேது கால்வாய்த் திட்டத்தை மீண்டும் துவக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மா னம் ஒன்றை சட்டப் பேரவையில் கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். 

மன்னார் வளைகுடாவில் பாக் நீரிணைப் பகுதியில் கடலை ஆழப்படுத்தி கப்பல் போக்கு வரத்தை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் சேது கால்வாய் திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்படுமானால் வங்கக் கடலில் துறைமுகங்களுக்கு இடையிலான கப்பல் போக்கு வரத்தை எளிதாக்க முடியும். இந்தியப் பெருங் கடலில் இருந்து  இலங்கையைச் சுற்றி பின்னர் சென்னை உள்ளிட்ட வங்கக் கடல் துறைமுகங்க ளுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையை இந்த திட்டம் மாற்றும். 

இந்தத் திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1860ஆம் ஆண்டிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு தரு ணங்களில் சேது கால்வாய்த்  திட்டம் காரிய சாத்திய மான ஒன்றே என ஆய்வுகளின் மூலம் நிரூ பிக்கப்பட்டது. 

இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது 2005ஆம் ஆண்டில் ரூ.2427.40 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டு பணி களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வம்படி யாக பாஜக -ஆர்எஸ்எஸ் பரிவாரம் சேது கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால் இலங் கைக்கு ராமர் கட்டிய பாலம் சேதமாகிவிடும் என்ற அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத வாதங்களை முன்வைத்தது. இதனால் இந்த திட்டம் முடக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில், ராமர் பாலம் இருந்த தாக திட்டவட்டமாக கூற முடியாது என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே உள்ள  திட்டுகளை இராமர் பாலத்தின் சிதைந்த பகுதி கள் என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது. அங்கு கட்டுமானம் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இராமர் கட்டிய பாலம் என்று ஆர்எஸ்எஸ் பரிவாரம் புரளி கிளப்பியது உண்மையல்ல என்பதை அவர்களது ஆட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரின் அறிக்கையே தெளிவு படுத்திவிட்டது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜகவினரும் கூட வேறு வழியின்றி இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். எனவே இனியேனும் ஒன்றிய அரசு தாமதப்படுத்தாமல் தமிழ்நாட்டு மக்களின் ஒன்றரை நூற்றாண்டு கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறை வேற்ற முன்வர வேண்டும்.