இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட் டிற்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமை தான். ஆனால் அது ஏதோ மோடி ஆட்சியின் சாதனையால் விளைந்த நிகழ்வு போல் பகுமா னம் கொழிப்பதுதான் அபத்தமாக இருக்கிறது.
ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள 20 நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2023) ஜி20 மாநாட்டை நடத் தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் இந்தியப் பொருளாதா ரம் மற்றும் சமூக அரசியல் நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வழக்கமான ஒன்று தான். ஆனால் பிரதமர் மோடி துவங்கி அனைத்து சங்பரிவாரும், மோடியின் ஆட்சிக்கு ஜி20 நாடுகள் சேர்ந்து மகுடம் சூட்டுவது போன்ற ஒரு பில்டப்பை கொடுக்கின்றனர்.
பிரதமரோ இந்தியாவின் பலத்தை உல கிற்குக் காட்டக் கிடைத்திருக்கும் தனித்துவ மான வாய்ப்பு என்கிறார். எந்த பலத்தை என்பது தான் புரியவில்லை. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டி ருப்பதையா? அல்லது நகர்ப்புறத்தில் படித்து பட்டம் பெற்று தகுதியிருந்தும் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 8.96 சதவிகிதமாக உயர்ந்திருப்பதையா? எதை இந்தியாவின் பலமா கக் காட்டப் போகிறார் ?
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் அரியா னாவில்தான் 30.6 சதவிகிதம் பேர் வேலையில்லா மல் இருக்கின்றனர். அந்த மாநிலமே வேலை யின்மையில் முதலிடத்தில் இருக்கிறது. இதனை ஒரு வேளை ‘தனது கட்சி’ ஆட்சியின் பலமாக காட்டுவாரோ? அதனால்தான் என்னவோ ஜி20 மாநாட்டு லோகோவில் பூஜ்ஜியத்தைத் தாமரை தாங்கி நிற்கிறது. அதன் நிறம் கூட பாஜகவின் காவி யும், பச்சையுமாகப் பசப்புகிறது.
இதில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவிடம் ஏராளமாக எதிர் பார்க்கின்றன என மோடி பொய் நெல்லை குத்தி பொங்கல் வைத்திருக்கிறார். இந்தியக் கிராமப்புறங் களில் உற்பத்திப் பொருட்களை வாங்குவதில் 17 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 10.1 சதவிகிதமும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் நுகர்வுப் பொருட்களின் விற்பனையில் 15.3 சதவிகிதம் சரிவ டைந்திருக்கிறது. இதில் எங்கே இருக்கிறது வளர்ச்சி? ஒரு வேளை இந்தியா என்பது அதானியும், அம் பானியும் மட்டும்தான் என்ற தன் உள்ளக்கிடக்கை யைப் பிரதமர் தெரிவித்திருப்பார் போலும்!
இந்த பெருமையைப் பறைசாற்றவா ஜி20 மாநாடு என்ற பெயரில் 200 இடங்களில் மாநாடு போன்ற கூட்டங்கள்? ஒன்றிய மோடி அரசின் தோல்விகளை இந்த ஒட்டுப் பூச்சுகள் மூலம் ஒரு போதும் மறைத்திட முடியாது. தள்ளாடும் இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கித் தடுக்க முடியாது.
இதைத்தான் வள்ளுவர் “பெருமை பெருமிதம் இன்மை சிறுமை,பெருமிதம் ஊர்ந்து விடல்” என் கிறார். அதாவது பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடைய வரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர் என்கிறார்.