இந்தியாவின் அண்டை நாடான இலங்கை யைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட அனைத்து வளர்முக நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். கண்மூடித்தனமாக நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றுவது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதற்கு பாகிஸ்தானும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நிதி பற்றாக் குறை கடந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 0.9 சதவீதமாக இருந்த நிலையில் 2022-23 ஜூலை, அக்டோபர் காலத்தில் 1.5 சதவீதமாக அதி கரித்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம் அந்நியச் செலா வணி கையிருப்பில் பெரும் சரிவு ஆகியவற்றோடு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதமும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை திவால் நிலையை நோக்கி தள்ளியுள்ளது.
எரிசக்தித் துறையில் கடன் அதிகரித்து மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் பயன் பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மின்துறையில் கடன் கடந்தாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.2.437லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அரசு அலுவலகங்களுக்கும் மின்சார பயன்பாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அர சுத்துறைகள் மின்சாரப் பயன்பாட்டை 30 சத வீதம் குறைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள் ளது. இதனால் சமீபத்தில் நடந்த அமைச்சர வைக்கூட்டத்தில் கூட மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை என்றும் சன்னல் வழியே கிடைத்த சூரியஒளியில்தான் கூட்டம் நடந்தது என்றும் அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவிப்பது நிலை மையின் விபரீதத்தை உணர்த்துகிறது.
அந்தநாட்டின் போக்குவரத்துத் துறையில் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் இருப்பு மூன்று நாட்களுக்கே இருப்பதால் ரயில்வே துறைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதைத்தடுக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் பலன ளிக்கவில்லை. இருக்கும் அந்நியச் செலவா ணியும் எரிபொருள் இறக்குமதிக்கே செலவிடப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியாகவும் மாறியுள்ளது. தொடர்ந்து குழப்ப நிலையில் உள்ள பாகிஸ்தான் அரசியல் சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்தான் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். சில பயங்கரவாத அமைப்புகள் போட்டி அரசாங்கம் அமைத்துள்ளதாக அறிவித் துள்ளன. சுயசார்பு பொருளாதாரத்தை கைவிட்டு கார்ப்பரேட் பாணி நவீன பொருளாதார கொள் கையை பின்பற்றுவது ஆபத்திலேயே கொண்டு விடும் என்பதற்கு இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்தும் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.