headlines

img

அமைதியை கொண்டுவர இஸ்ரேல் ஒத்துழைக்குமா?

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் துவங்கிய எட்டு மாதங்களில் முதல் முறையாக காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவில் கொண்டுவரப்பட்ட இந்த போர் நிறுத்த தீர்மானம் இஸ்ரேல் ராணுவ வீரர்களை காசாவில் இருந்து திரும்பப் பெறுதல், இஸ்ரேலால் சிறை வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளையும் ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகளையும் பரிமாற்றிக் கொள்ளுதல், துவக்கத்தில் 6 வாரம் போர் நிறுத்தத்தை மேற்கொள் ளுதல், தொடர்ந்து இந்த போர் நிறுத்தத்தை நிரந்தர மாக்குதல் என்ற அடிப்படையில் முன் வைக்கப் பட்டுள்ளது. இந்த போர்நிறுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

இதுவரை ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன  போர்  நிறுத்த தீர்மானங்கள் அனைத்தையும் அமெ ரிக்கா மட்டும் தான்  தனது ரத்து (Veto ) அதி காரத்தை பயன்படுத்தி நிராகரித்து வந்தது.  தற்போது  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போராட் டங்கள், அரசியல் சூழல் காரணமாக போரை நிறுத்தத் தலையிட வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக போர்த்துவங்கியதில் இருந்து அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பைடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர், மருத்துவர், மாணவர்கள் என பல்வேறு பிரிவினர் எங்கள் வரிப்பணத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங் காதே என போராட்டத்தை தொடர்கின்றனர். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள சூழலில் இந்த போராட்டம் பைடன் அரசாங்கத்திற்கு நெருக்கடியை உரு வாக்கியுள்ளது. இந்த அரசியல் அழுத்தங்க ளின் பின்னணியில்  கடந்த மாதம் ரஃபா பகுதிக்குள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு  ஆயுதங்கள் தர மாட்டோம் என வெளிப்படை யாக அறிவித்த பைடன், அமெரிக்க அரசை மறை முகமாக வழி நடத்தி வரும் ஆயுத முதலாளி கள் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்க்கு ஆதரவு கொடுக்கத் துவங்கிய நிலையில், சில நாட்களி லேயே இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்ப அனுமதி கொடுத்தார்.

இரு புற  அரசியல் அழுத்தங்களை கையாள பைடன் இனப்படுகொலை மற்றும் போர் நிறுத்தம் ஆகிய இரண்டுக்கும் ஆதரவாக சில முடிவு களை எடுத்து வருவதாக தெரிகிறது.      

இந்நிலையில் தான் அமெரிக்க ஆதரவுடன் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் ஐ.நா அவையில் போர் நிறுத்த தீர்மானம் நிறை வேற்றப்பட்ட பிறகும் காசா பகுதியில்  இஸ்ரேல் ராணு வம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதை உடனே இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.