headlines

img

நாட்டுக்கான நேரம்

“அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். நாட்டுக்கான நேரம் வந்துவிட்டதால் நான் இங்கு வந்தேன்” என்று, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று பேசி யிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

தில்லியை அடைந்துள்ள ராகுல் காந்தியின் யாத்திரையில் வழிநெடுகிலும் அக்கட்சியின் பல  தலைவர்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தியிருந்தாலும், இதுவரையிலும் தேசிய அரசியல் சூழலில் தனது நிலைபாட்டை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்து வந்த கமல்ஹாசன், நேரடியாக தில்லியில்  ராகுல் காந்தியின் பயணத்தில் பங்கேற்று அவ ரோடு கரம்கோர்த்ததும், நாட்டிற்கான நேரம் வந்து விட்டது என்று கூறியிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

8 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்துவரும் மோடியின் ஆட்சியில் இந்திய அர சியலமைப்புச் சட்டம் முற்றாக சிதைக்கப்பட்டு வருகிறது. வரலாறு காணாத வகையில் - பாசிசத் தன்மை கொண்ட - இந்துத்துவா மதவெறி இந்த தேசத்தையும், மக்களையும். அரசியல்  அமைப்புச் சட்ட அடிதளங்களையும் தனது கொடுங்கரங்களால் கவ்விப்பிடித்துள்ளது. இத்த கைய சூழலில் நாட்டைக் காக்க எண்ணும் பல அர சியல் கட்சிகள், பல தலைவர்கள் பாஜகவுக்கு எதி ரான நிலைபாட்டை எடுத்ததாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

பீகாரில் பாஜகவுடன் இருந்த நிதீஷ்குமார் தனது நிலைபாட்டை மாற்றி கொண்டு பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொண்டார். தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி  முன்பு இருந்த பாஜக ஆதரவு நிலைபாட்டிலி ருந்து முற்றாக விலகி, பாஜகவின் மதவெறி நட வடிக்கைகளையும் மாநில உரிமை பறிப்பு நட வடிக்கைகளையும் தீவிரமாக விமர்சித்து வரு கிறார். கேரளாவில் கம்யூனிஸ்டுகளை எதிர்ப்ப தற்காக உள்ளூர் மட்டத்தில் பாஜக நபர்களுடன் அவ்வப்போது இணைந்து கொண்ட முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் தற்போது தங்களது நிலையை மாற்றிக் கொண்டுள்ளன.

2024 தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜக  எதிர்ப்பு மனநிலை நாடு முழுவதும் மக்கள் மத்தி யில் அதிகரித்து வருகிறது. இமாச்சலப்பிரதேச சட்டமன்றம், தில்லி மாநகராட்சி தேர்தல்களில் சமீபத்தில் பாஜகவின் வீழ்ச்சி மக்களின் மன நிலையை காட்டுகிறது. குஜராத்திலும் கூட பெரும் எண்ணிக்கையிலான சிறுபான்மை மக்கள் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததன் மூலம் பெறப்பட்ட வெற்றி தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாஜக எதிர்ப்பு வாக்குகளை மிக அதிகபட்ச மாக ஒருங்கிணைக்க வேண்டியது தற்போதைய தேசிய அரசியல் சூழலில் முதன்மையான பணி  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சி களின் இத்தகைய நிலைபாடு, பாஜக எதிர்ப்பு அணி சேர்க்கையை வலுப்படுத்த உதவட்டும்!