games

img

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.  

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் து ஹான் யூவை எதிர்கொண்டார்.  

இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார். பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார்.  

சுமார் 62 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 17-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் து ஹான் யூவை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

அரையிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை சைனா கவாகாமியை எதிர்கொள்கிறார்.

;