games

img

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் வெளியேறினார் பிவி சிந்து  

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தலைநகர் கோலா லம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய், சாய் பிரணீத், கஷ்யப் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் நேற்று விளையாடினார்.  

இந்த போட்டியில் தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை எதிர்கொண்ட சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.  இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டார்.  

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இதன் மூலம் சிந்து 17-வது முறையாக தாய் சூ யிங்-யிடம் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பி.வி.சிந்து தாய் சு யிங்கிடம் 5 முறை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.  

கடந்த 2019 ஆண்டில் தான் பி.வி.சிந்து, கடைசியாக தாய் சு யிங்கை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் மட்டும் உள்ளார். இன்று நடைபெறும் காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் கண்டா சுயனேமாவை எதிர்த்து விளையாட உள்ளார்.

;