கடந்த வாரம் இந்தியாவின் பெங்களூரு, புனே, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களில் சர்வதேச டென்னிஸ் கூட்ட மைப்பின் உலகச் சுற்றுப்பயணத் தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து வீராங்கனை கள் கலந்துகொண்ட நிலையில், செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை டெஜனா ரெடாநோவிக்கும் கலந்து கொண்டார். போட்டிகளில் பங்குபெற்றுவிட்டு நாடு திரும்பும் போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”எனக்கு இந்திய நாட்டைப் பிடிக்கவில்லை. இந்த நாட்டின் போக்கு வரத்து நெரிசல், சுகாதாரம் என எதுவும் பிடிக்கவில்லை. உணவில் புழுக்கள் இருந்தன. தலையணை மஞ்சள் ஆக இருந்தது. மெத்தை விரிப்பில் அழுக்குகள் இருந்தன. அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இனவெறி இல்லை
டெஜனாவின் கருத்து சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவ, இனவெறியுடனும், இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக நெட்டி சன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியர்களின் கண்டனத்திற்கு விளக்கம் அளித்துள்ள டெஜனா,”நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்து நான் இங்கே எதிர்கொண்ட தை போன்ற விஷயங்களை நீங்களும் எதிர்கொண்டு அவை உங்களுக்குப் பிடிக்காமலிருந்தால் நீங்கள் இனவெறியர் என்றாகுமா? நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் இனவெறிக் கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எல்லா நாடுகளிலும் எல்லா நிறத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்” என கூறினார். டெஜனாவின் விளக்கத்திற்கு பிறகு நெட்டிசன் கள் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாது போல விட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.