games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் ஜோகோவிச்

சுமார் ரூ.426.27 கோடி பரிசுத் தொகை கொண்ட ஆஸ்திரே லிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் 4-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளூர் நாயக னான (ஆஸ்திரேலியா)  டீ மினாரை 6-2, 6-1, 6-1  என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  ரஷ்யாவின் ரப்லவ் 6-3, 3-6, 6-3, 4-6, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ரூனேவை வீழ்த்தியும், அமெரிக்காவின் ஷெல்டன் சக நாட்டு  வீரரான வோல்பை 6-7 (5-7), 6-2, 6-7 (4-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியும் காலிறுதிக்கு முன்னேறி னர். ஷெல்டன் - வோல்ப் ஆட்டம் 3 மணிநேரம் 47 நிமிடம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்சியா அவுட்

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆம் சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையும் பிரான்ஸ்  நாட்டவருமான கார்சியாவை தர வரிசையில் இல்லாத போலந்தின் லினிட்டே 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி  பெற்றார். பெலாரசின் சபலென்கா - சுவிஸின் பென்கிக்கையும், செக்குடி யரசின் பிளிஸ்கோவா - சீனாவின் ஜங்கையும், குரோஷியாவின் வெக்கிச் - செக்குடியரசின் லிண்டா புருஹ்விர்டோவாவையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

3-வது சுற்றில் இந்திய ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி, உருகுவேயின் பெஹார் - ஜப்பா னின் நினோமியா ஜோடியை 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  ஆஸ்திரேலிய ஓபனில் பங்குபெற்ற அனைத்து இந்திய நட்சத்திரங்களும் வெளியேறிவிட்ட நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில்  சானியா - போபண்ணா ஜோடி மட்டுமே விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.