சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசை நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தல்
பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு பின் நடைபெற்ற அனைத்து சர்வதேச தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா (ஹரியானா), சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் 1,445 புள்ளிகள் குவித்து, ஓராண்டுக்குப் பின் இந்தியாவை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். நீரஜ் சோப்ராவிற்கு அடுத்ததாக 1431 புள்ளிகளுடன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) இரண்டாவது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் மூன்றாவது இடத்திலும், 1370 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் (நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்) அர்ஷத் நதீம் நான்காவது இடத்திலும் உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றாலும், தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் முதலிடத்தை கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தட்டிப் பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளப் உலகக்கோப்பை 2025 காலிறுதியில் செல்சி, பால்மீராஸ்
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக் கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரே சில் கிளப் அணிகளான பால்மீராஸ் - போட்டாபோகோ மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பால்மீராஸ் காலிறுதி சுற்றுக்கு முன் னேறியது. தொடர்ந்து சனிக்கிழமை அன்று நள்ளிரவில் நடைபெற்ற 2ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் கிளப் அணி யான பென்பிகா - இங்கிலாந்து கிளப் அணியான செல்சி உள்ளிட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செல்சி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.