games

img

தமிழ்நாட்டில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட்

விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு ஆகவே ஆகாது. காரணம் காஷ்மீர் எல்லைப் பிரச்சனையால் இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் எல்லையில் அடிக்கடி மோதிக் கொள்வது போல கிரிக்கெட்டிலும் இரு நாட்டு வீரர்களும் உக்கிரமாக மோதிக் கொள்வார்கள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால்  ஒட்டு மொத்த விளையாட்டு உலகமே கவ னம் செலுத்தும். கிரிக்கெட் விளை யாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்ன ஆனது என்று கேட்பார்கள். அந்த ளவுக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் விளையாட்டு உலகில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், சனியன்று நடை பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன. போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. அதே போல பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியது. இரு அணிகளும் தங்களது முதல் 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலை யில், இருஅணிகளும் தங்களது 3- ஆவது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் முனைப்பில்அணிகள் களமிறங்கு வதால்,  இந்தியா - பாகிஸ்தான்  ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : மதியம் 2:00 மணி
மழை : 40% வாய்ப்புள்ளது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

 

இந்தியா விளையாடினால் மட்டுமே சுத்தம் செய்வார்களா?

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அக மதாபாத் நரேந்திர மோடி மைதா னத்தில் நடப்பு சீசன் உலகக் கோப்பை தொடரின் துவக்க ஆட்டம் (இங்கி லாந்து - நியூஸிலாந்து) நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான ஏற்பாடுகள் படுமோசமாக இருந்தன. மைதான இருக்கைகள் சுத்தம் செய்யப்படவில்லை. காவி வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட மைதான இருக்கையில் காக்கைகள் எச்சமிட்டு அலங்கோலமாக இருந்தன. இதனை கண்டு இங்கிலாந்து, நியூஸிலாந்து நாட்டின் ரசிகர்கள் முகம் சுழித்தனர். சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்காக  அகமதாபாத் நரேந்திர மோடி மைதான “காவி” இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் பலத்த பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை சீர்குலைக்க போட்டி நடைபெறும் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் தாக்குதல் நடத்த உள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. பயங்கரவாதிகள் மீது சந்தேகம் அதிகரித்த நிலையில், போலீசார் விசாரணையில் அகமதாபாத் நகரைச் சேர்ந்த எவ்வித குற்ற பின்புலம் இல்லாத நபர்தான் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிய வர அவரை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் முக்கிய பிரபலங்கள் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண அகமதாபாத்தில் குவிந்து உள்ளதால் குஜராத் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.