அமித் ஷா மகன் ஜெய் ஷாவால் ஏற்பட்டதா?
இலங்கை நாடு பல்வேறு சர்வதேச விளையாட்டுகளில் பங்குபெற்றாலும் அந்நாட்டிற்கு ஒரே ஒரு பிரிவு தான் கவுரவத்தையும், மரி யாதையும் தருகிறது. அந்த பிரிவு கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளை யாட்டை நன்கு புரிந்து விளையாடிய தால் 1996இல் ஒருநாள் உலகக் கோப்பை, 2002இல் சாம்பியன்ஸ் டிராபி, 2014இல் டி20 உலகக்கோப்பை, 6 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கிரிக்கெட் உலகின் நட்ச த்திர, பலமான அதிரடியாக உள்ளது. இலங்கை அணிக்கும் கிரிக்கெட் உலகிற்கும் இப்படி ஒரு உறவும், மரியாதையும் உள்ள நிலையில், நடப்பு சீசன் உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது இலங்கை அணி. இதனால் கடுப்படைந்த இலங்கை விளையாட்டுத்துறை அமை ச்சகம் கிரிக்கெட் வாரியத்தை கலைத் தது. அடுத்த சில மணிநேரங்களில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி, சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) உறுப்பினர் பதவியில் இருந்து இலங்கை அணியை நீக்கியது ஐசிசி. மேலும் 2024 ஜனவரி 14 முதல் பிப்ர வரி15 வரையில் இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா விற்கு மாற்றியது ஐசிசி. தொடர் உரிமம் நீக்கப்பட்டாலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை யால் இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா வில் நடைபெறும் உலகக்கோப்பை டி-20 பங்கேற்கிறது. “அரசியல்” என்ற 5 எழுத்து வார்த்தையால் விளையாட்டு உலகில் பிரம்மாண்ட அவப்பெயரை இலங்கை அணி பெற்றுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஜெய் ஷா மீதான சர்ச்சை
இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதன் எதி ரொலியாகவே அரசியல் தலையீடு நிலவுகிறது எனக் கூறி ஐசிசி அந்நாட்டை உறுப்பினர் பதவி யில் இருந்து நீக்கியது. ஆனால் இந்த ஒரு காரணத்தால் இவ்வளவு பெரிய அவப்பெயர் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன வென்று இதுவரை இலங்கை விளை யாட்டுத்துறை அமைச்சகம் தெரி விக்கவில்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, “இலங்கை கிரிக்கெட் வாரிய அதி காரிகள் மற்றும் ஜெய் ஷா இடை யிலான தொடர்பு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ண த்தில் பிசிசிஐ உள்ளனர். தற்போது ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார். ஜெய் ஷாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. இந்தியா வில் உள்ள ஒரு மனிதர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார். அவரின் தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்த நபராக உள்ளார்” என போட்டுடைத்தார். அர்ஜுனா ரணதுங்காவின் இந்த கருத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சகம் எவ்வித விளக்க மும் தெரிவிக்கவில்லை. மாறாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கே இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரினார். ரணில் விக்கிரமசிங்கே மன்னிப்புக் கோரிய விவகாரத்தை உற்றுநோக்கினால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஜெய் ஷாவின் தலையீடு இருப்பது போன்ற சந்தேகம் எழுகிறது.