games

img

விளையாட்டு...

சூரிச்
மகளிர் கால்பந்து உலகக்கோப்பைக்கு தனியாக சலுகை கொடுக்க முடியாது
ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்ய தயங்க மாட்டோம்

ஐரோப்பிய நாடுகளுக்கு பிபா மிரட்டல்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 20-வது சீசன் சவூதி அரேபியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.  கால்பந்து விளையாட்டிற்கு பிரசித்திபெற்ற ஐரோப்பிய கண்டத்தில் ஆடவர் போட்டிகளை விட, மகளிர் போட்டிகளை தொலைக்காட்சி மூலம் காண்போர் விகிதம் மிக குறைவு. அதா வது ஆடவர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை 20 கோடி பார்க் கின்றனர் என்றால், மகளிர் உல கக்கோப்பை போட்டியை 3 கோடி பேர்தான் தொலைக்காட்சி மூலம் பார்க் கின்றனர். இதனால் மகளிர் உல கக்கோப்பை நேரடி ஒளிபரப்பில் சர்வ தேச கால்பந்து சம்மேளனத்திடம் பல்வேறு சலுகைகளை, அதாவது ஆட வர் போட்டிகளை விட கிட்டத்தட்ட 100 மடங்கு குறைவான உரிமை தொகையுடன் ஒளிபரப்பு செய்கிறது ஐரோப்பிய சேனல்கள். இந்நிலையில், ஐரோப்பிய சேனல்களின் இந்த சலுகைக்கு பிபா  செக் வைத்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவர் கியானி இன்பான்டி னோ, “ஐரோப்பிய நாடுகளில் மக ளிர் கால்பந்து உலகக்கோப்பைக் கான சலுகை உரிமை தொகையை குறைத்து, ஆடவர் போட்டிகளை போன்று சாதாரண உரிமை தொகை யில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்கு இணங்காவிட்டால் வரும் உலகக்கோப்பை தொடர் ஐரோப்பிய நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு முடக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் 2023

லக்னோ அணிக்கு பின்னடைவு: கேப்டன் கே.எல்.ராகுல் விலகல்

யுத்தம் நடந்த பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தின் பொழுது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் கடைசி வீரராக பேட்டிங்கில் களமிறங்கி ரன் குவிக்க முடியாமலும், பேட்டிங் செய்ய முடியாமல் திணறிய கே.எல்.ராகுல், காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  கீப்பிங், கேப்டன் கவனிப்பு, அதிரடி பேட்டிங் என பல்வேறு திறமைகள் கொண்ட கே.எல்.ராகுல் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுல் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள் மேய்ந்த தரையை போன்று லக்னோ மைதானம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான லக்னோ நகரில் உள்ள ஏக்னா மைதானம், ஐபிஎல் தொடரில் லக்னோ  அணியின் ஹோம் (தாய் மைதானம்) மைதானமாக உள்ளது. இந்தியாவின் மிகவும் மந்தமான  மைதானம் என்ற சிறப் புடைய லக்னோ மைதானம் ஐபிஎல் தொடர் தொடங்கும் நேரத்தில் நல்ல புற்களுடன் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்பொழுது கால்நடைகள் மேய்ந்த தரையை  போன்று 30 யார்டு வட்டம் மாறியுள்ளது. பிட்ச் பகுதிக்கு அருகே  மற்றும் 30 யார்டு வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புற்கள்  காணுவது அரிது. பாலைவன பகுதிபோன்று மண் பகுதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.   டிக்கெட் வருவாய் அதிகம்: கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாமே... நடப்பு சீசன் தொடரில் லக்னோ மைதான நிர்வாகம் ஆரம்ப விலை டிக்கெட்டிற்கு ரூ.5000 வாங்குகிறது. சீட்டைப்  பொறுத்து ரூ.25000 வரை டிக்கெட்டுகள் உள்ளன. ஒரு ஆட்டத்தில் ரூ.35 கோடிக்கு (சராசரியாக) மேல் டிக்கெட் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயில் ஒரு பங்கை செலவழித்து தண்ணீர் ஊற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் அதனை கூட செய்யாமல் மைதானம் கண்மாய்கரை போன்று உள்ளது.

இன்றைய ஆட்டம்

ஹைதராபாத் - கொல்கத்தா
இடம்: ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் :  இரவு 7:30 மணி

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)