games

img

கிரிக்கெட் உலகை ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்த மேற்கு இந்திய தீவுகள்

முன்னாள் சாம்பியனும், கிரிக்கெட் உலகின் முக்கிய நட்சத்திர அணிகளில் ஒன்றான மேற்கு இந்திய தீவுகள் அணி, கடந்த 2 ஆண்டுகளாக செயற்கை யாக உருவாக்கப்பட்ட இடியாப்ப சிக்கலில் சிக்கி தவியாய் தவித்தது. மூத்த வீரர்களான பொல்லார்டு, ரஷல் உள்ளிட்ட சில வீரர்கள் நாட்டிற்காக விளையாட ஆர்வம் காட்டாமல், ஐபிஎல் போன்ற வெளிநாட்டு உள்ளூர் டி-20 தொடர்களில் வருமானத்திற்காக விளையாட ஆரம்பித்தனர்.

இவர்களை பெரும்பாலானோர் பின்பற்ற மேற்கு இந்தியத் தீவுகள்  அணி நட்சத்திர வீரர்கள் இல்லாத காலி கூடாரமானது. இதன் விளைவாக சமீபத்தில் இந்தியாவில் நிறைவு பெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்றிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெளியேறி யது. 2முறை சாம்பியன் பட்டம் வென்ற தலைசிறந்த ஜாம்பவான் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே சோகத் தில் மூழ்கியது. அந்நாட்டு ரசிகர்கள்  தங்கள் நாட்டு ஆட்டத்தை காண மைதானத்திற்கு செல்லாத அளவிற்கு மேற்கு இந்திய தீவுகள் அணியின் நிலைமை பரிதாப நிலைக்குச் சென் றது. கிரிக்கெட் உலகில் மேற்கு  இந்தியத் தீவுகள் அணி அவ்வளவு தான் என விளையாட்டு ஊடகங்க ளும் நக்கல் கட்டுரை எழுதின.

இந்த இக்கட்டான சூழலில் மேற்கு  இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர்க ளான ஆந்தரே கோலே, டேரன் சம்மி ஆகியோர் மேற்கு இந்திய தீவுகள் அணியை மீட்கும் முயற்சியில் தீவிர மாக களமிறங்கினர். பயிற்சியாளர் பொறுப்புடன் இளம் வீரர்களை கண்டறிந்தது மட்டுமல்லாமல், ராணு வத்திற்கு நிகரான பயிற்சி அளித்து 2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் மிரள வைத்தனர். 

2 நாட்களுக்கு முன் ஆஸ்திரே லிய அணியையும் அதன் சொந்த மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வெறும் 8 ரன்களில் வீழ்த்தி, மேற்கு இந்தியத் தீவுகள் ரசிகர்களை மட்டு மின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை யும் ஆனந்தக் கண்ணீர் கடலில் நனையச் செய்துள்ளனர் மேற்கு இந்திய தீவு களின் இளங்கன்றுகள்

கண் கலங்கிய லாரா

தங்கள் அணியின் வரலாற்று வெற்றியை கமண்டரியின் பொழுது கண் கலங்கி ஆனந்த கண்ணீரு டன் கொண்டாடிய மேற்கு இந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா.

ஷமர் ஜோசப்

2023-இல் வாட்ச்மேன் : 2024-இல் ஆட்டநாயகன்
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம் அந்த அணியை மிரட்டிய மேற்கு இந்தியத் தீவுக ளின் இளம் பந்துவீச்சாளரான ஷமர் ஜோசப் (24), கடந்த ஆண்டு (2023) கரீபியன் தீவில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் வாட்ச் மேனாக இருந்தார். அதன்பிறகு அதே மைதானத்தில் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக உருவெடுத்து, மேற்கு இந்தி யத் தீவுகள் அணியிலும் இடம்பெற்றார். கிரிக்கெட்டில் களமிறங்கிய சில மாதங்கள் என்ற நிலையில், பயிற்சியாளரின் ஆலோ சனைகளை உள்வாங்கி ஆஸ்திரேலிய அணியை அதன் வரலாற்று சிறப்புமிக்க மைதானத்திலேயே பந்தாடி ஆட்டநாய கன், தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஒரே ஆண்டில் வாட்ச்மேன், வலைப் பயிற்சி பந்துவீச்சாளர், சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் என 3 வித்தியாசமான வரலாறை படைத்து கிரிக்கெட் உலகில் பலத்த பாராட்டுகளைக் பெற்றுள்ளார். காலப்போக்கில் இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அடுத்த ரபடா ஆக (தென் ஆப்பிரிக்கா) மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.