games

img

ஆஸ்திரேலியா 4-ஆவது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலியா 4-ஆவது முறையாக சாம்பியன்

பேட்டிங் சொதப்பலே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்

15-ஆவது சீசன் இளையோர் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஞாயிறன்று நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்தி ரேலிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4-ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. 6-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் இந்திய அணியின் கனவு கடும் போராட்டத்துக்கு இடையே கானல் நீரைப் போன்று காணாமல் போனது.  தோல்விக்கு காரணம் இந்திய அணி பந்துவீச்சில் ஓரளவு நன்றாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை 253 ரன்களில் கட்டுப்படுத்தி னாலும், பேட்டிங்கில் வியூகம் அமைக் காமல் பெயரளவிற்கு களமிறங்கியது பெரியளவு பின்னடைவை ஏற்படுத்தி யது. தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் சீதோஷ்ண நிலையால் மாலை நேரங்களில் லேசான அளவில் உயிரோ ட்டமாக மாறும் என்பதை உணராம லும், ஆஸ்திரேலியர்கள் பந்துவீச்சில் முரட்டுத்தனமாக விளையாடக் கூடி யவர்கள் என்பதையும் மனதில் வைக்காமல் களமிறங்கியது இந்திய அணியின் தோல்விக்கான முதல் படியாக அமைந்தது. நல்ல பார்மில் இருந்தும் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் 6 வீரர்கள் ஒற்றை இலக்கத் தில் பெவிலியன் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே இந்திய அணி படு தோல்வியுடன் கோப்பையை நழுவ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையை விட 
உள்ளூர் கோப்பைக்கு பரிசுத்தொகை அதிகம்

தென் ஆப்பிரிக்கா நாட்டில் இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும், ஐபிஎல் போன்று அந்நாட்டில் நடைபெறும் உள்ளூர் தொடரான எஸ்ஏ 2024 தொடரும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இரண்டையுமே தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்திய நிலையில், பரிசுத்தொகையில் பெரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதாவது உள்ளூர் தொடருக்கு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு மட்டும் ரூ.15 கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மொத்த பரிசுத்தொகையே ரூ.12 கோடி தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பரிசுத்தொகை பற்றி சொல்லவில்லை இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை விபரத்தை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் சாதாரண அறிவிப்பை கூட வெளியிடவில்லை. புரியும்படி சொன்னால்  பரிசுத்தொகை விபரம் பற்றி வெளியிடவில்லை. எல்லாம் மறைமுகமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எஸ்ஏ 2024 தொடருக்கான பரிசுத்தொகை தொடர் தொடங்கும் முன்பே அறிவிக்கப்பட்டது. சர்வதேச தொடரை விட சாதாரண டம்மி உள்ளூர் தொடருக்கு பெரியளவில் வரவேற்பு அளிப்பது, கிரிக்கெட் விளையாட்டின் மரபை அழிக்கும் செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புரோ கபடி 2024 : குவாலிபையரில் 4 அணிகள்

10-ஆவது சீசன் புரோ கபடி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 11-ஆவது கட்ட லீக் ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.  இன்னும் ஒரே ஒரு கட்ட லீக் ஆட்டங்கள் (12-ஆவது கட்டம் - பஞ்சுக்குலா ஹரியானா) மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில், பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் குவாலிபையர் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. குவாலிபையர் சுற்றுக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் தகுதி பெறும் என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி (திங்களன்று) ஜெய்ப்பூர், புனே, தில்லி, குஜராத் ஆகிய 4 அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்றைய ஆட்டம்

பாட்னா - தெலுங்கு டைட்டன்ஸ்
(119-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : இரவு 8 மணி

இடம் : நேதாஜி மைதானம், 
கொல்கத்தா, மேற்கு வங்கம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)