ராஞ்சி டெஸ்ட்
இங்கிலாந்து 353
இந்திய அணியும் திணறல்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கி லாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 4-ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வெள்ளி யன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப்பின் (வலதுகை - சூப்பர் பாஸ்ட்) மிரட்ட லான வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 112 ரன்க ளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடு மாறியது. அதன்பிறகு அனுபவ வீரர் ஜோ ரூட், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் ஆகியோர் ராஞ்சி மைதானத்தில் நங்கூரம் அமைத்து அணியை சரிவி லிருந்து மீட்கப் போராடினர். அபார மாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்து அசத்த, பென் போக்ஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ராபின்சன் இறுதிக்கட்ட அதிரடியில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க 2-ஆம் நாள் மதிய உணவு இடைவேளை நேரத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங் ஸில் 104.5 ஓவர்களில் 353 ரன்க ளுக்கு ஆட்டமிழந்தது. 122 ரன்கள் விளாசிய ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை யும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக் கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுக ளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங் ஸை இந்திய அணி இங்கிலாந்து அணியை போலவே தடுமாறியது. அதாவது 150 ரன்னை கடப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (73), சப்மன் கில் (38) ஆகியோர் ஓரளவு போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. ஜூரல் (30), குல்தீப் (17) ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பசீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை நாளான ஞாயிறன்று 3ஆம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடை பெறுகிறது.
இன்று 3-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா - இங்கிலாந்து
நேரம் : காலை 9:30 மணி
இடம் : ஜேசிஏ மைதானம், ராஞ்சி, ஜார்க்கண்ட்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா