games

img

டபிள்யூ.பி.எல் டைட்டில் ஸ்பான்சராக டாடா

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடராக ஆடவர்கள் விளையாடும் இந்தியாவின் ஐபிஎல் (IPL - இந்தியன் பிரீமியர் லீக்) தொடர் உள்ளது.  எந்த ஒரு விளையாட்டிலும் பாலின பாகுபாடு இருக்கக்கூடாது என்ற ஒலிம்பிக் விளையாட்டின் கூற்றின் படி நடப்பாண்டு முதல் மகளிருக்கும் டபிள்யூபிஎல் (WPL - மகளிர் பிரிமீயர் லீக்) நடத்தப்படவுள்ளது. அணிகள் தேர்வு, வீராங்கனைகள் ஏலம் என 60% வேலைகள்  நிறைவடைந்து, கேப்டன்கள் அறிவிப்பு மட்டுமே இன்னும் பாக்கி உள்ள நிலையில், டபிள்யூ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. ஐபிஎல் தொடரிலும் டாடா நிறுவனம்தான் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 4

மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும்  டபிள்யூ.பி.எல் தொடர் மும்பை வட்டத்திற்குட் பட்ட இரு மைதானங்களில் (பிராபோர்ன், நவி மும்பை) நடைபெறவுள்ளது. அகமதாபாத் (அதானி), மும்பை (அம்பானி), தில்லி (ஜெ.எஸ்.டபிள்யூ - ஜே.எம்.ஆர் குரூப்), உத்தரப் பிரதேசம் (காப்ரி குளோபல்), பெங்களூரு (தியாகோ - லண்டன்) ஆகிய 5 அணிகளில் 30  வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்த மாக 87 பேர் ஏலத்தின் மூலம் தேர்வாகி விளையாட உள்ளனர்.

ஒளிபரப்பு உரிமை அம்பானி கையில்

இந்திய கிரிக்கெட் ஆட்டங்கள், ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையை ஸ்டார் நிறுவனம் கைவசம் வைத்துள்ள  நிலையில், டபிள்யூ.பி.எல் தொடர் ஒளிபரப்பு உரிமை அம்பானி கைகளில் சென்றுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனமும், ஓடிடி ஒளிபரப்பு உரிமையை வியாகோம் 18 நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளது. இரண்டு நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானிக்கு சொந்தமானது ஆகும்.