யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இழந்த பெரு
19-வது சீசன் ஆடவர் இளையோர் (யு-17) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தென் அமெரிக்க நாடான பெருவில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொடருக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பெரு கால்பந்து சம்மேளனம் அடிப்படை கட்டமைப்பு வசதியை கூட இன்னும் முடிக்காமல் மந்த மான அளவில் ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இதனை சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற பொழுது கண்டறிந்த நிலையில், பெரு நாட்டில் நடைபெறும் யு-17 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் உரிமத்தை ரத்து செய்வதாக பிபா அறிவித்துள்ளது.
துரத்தும் துரதிர்ஷ்டம்
19-வது சீசன் ஆடவர் இளையோர் (யு-17) உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2021-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டி யது. கொரோனா காரணமாக 2023-ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிப்படை கட்டமைப்பு வசதிகளால் பெரு நாடு உலகக்கோப்பை நடத்தும் உரிமையை இழந்த நிலையில், 19-வது சீசன் உலகக்கோப்பை தொடர் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆடவருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 18-வது சீசன் 2019-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடை பெற்றது. இந்த தொடரில் பிரேசில் சாம்பி யன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
ஐபிஎல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி யை சென்னை அணி 12 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வைட், நோபால் ஆகிய பிரிவுகளில் மட்டும் உதிரியாக 18 ரன்களை வாரி வழங்கி யது. இதுகுறித்து சென்னை அணி யின் கேப்டன் தோனி வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பொது வெளி யில் எச்சரித்துள்ளார். அவர் கூறிய தாவது, “வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டால் முன்னேற்றம் அடைய முயற்சிக்க வேண்டும். மைதான தன்மைக்கும், ஆட்டத்தின் சூழ்நிலைக்கும் ஏற்ப பந்து வீச வேண்டும். பீல்டர்கள் இருக்கும் பகுதியை கணித்து அதற்கேற்ப பந்து செல்லும் வகை யில் திட்டத்தை மாற்றி அமைத்து பந்து வீச வேண்டும். முதலில் எதிரணி பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படு கிறார்கள் என்பதை கவனித்து அவர்கள் என்ன யுக்திகளை பயன் படுத்துகிறார்கள் என்பதை அறிந்து, அதையும் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆட்டத்தில் (சென்னை - லக்னோ) கூடுதலாக நோபால் வைடுகளை வீசப்பட்டுள் ளது. இது சரியானதாக இல்லை. நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப் படுத்த வேண்டும். இல்லை யென்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது எச்சரிக்கை. இல்லை யென்றால் அதன் பிறகு நான் வெளி யேறிவிடுவேன். சேப்பாக்கம் மைதானம் என்னை ஆச்சரியப்படுத்தி யது. இரண்டு அணிகளுமே 200 ரன்னுக்கு மேல் குவித்ததால் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இங்கு ரன்களை குவிக்க முடிந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது” என சென்னை அணி கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - பஞ்சாப்
இடம்: கவுகாத்தி, அசாம் நேரம் : இரவு 7:30
(சேனல் : தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
மொழி வரிசைகள்,
ஒடிடி - ஜியோ சினிமா)
கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு ஏன்?
அணி ஒதுக்கீடு இல்லாமல் அசாமிற்கு மட்டும் ஐபிஎல் ஆட்டம் ஏன்?
16-வது சீசன் ஐபிஎல் தொடர் சென்னை (தமிழ்நாடு), தில்லி, மும்பை (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்கம்), பெங்களூரு (கர்நாடகா), ஹைதராபாத் (தெலுங்கானா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), மொஹாலி (பஞ்சாப்), லக்னோ (உத்தரப்பிரதேசம்), அகமதாபாத் (குஜராத்), கவு காத்தி (அசாம்), தர்மசாலா (இமாச்சலப்பிரதேசம்) ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல் விளையாட்டைப் பொறுத்தவரை மைதான ஒதுக்கீட்டில், மாநிலங்களின் பெயர்களில் விளையாடும் அணிகளின் அந்தந்த மாநில சங்க கிரிக்கெட் மைதானம் ஒதுக்கப்படும். சுற்றுலா தல மைதானம் என்ற அடிப்படையில் இமயமலைச் சாரலில் உள்ள தர்மசாலா (இமாச்சலப்பிரதேசம்) ஒதுக்கப்படும். இதுதான் 15 ஐபிஎல் சீசனில் பின்பற்றி வரும் நடைமுறை ஆகும். ஆனால் 16-வது சீசனில் மாநிலங்களின் பெயர்களின் அடிப்படையில் 10 மைதானங்களும், வழக்கம் போல தர்மசாலா (இமாச்சலப்பிரதேசம்) மைதானம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வடகிழக்கு மாநிலங்களுக்கு அணிகள் எதுவுமின்றி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி மைதானத்திற்கு ஆட்ட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களுக்கு தனியாக அணிகள் இல்லாத காரணத் தினால் ஐபிஎல் போட்டியை பார்க்க அசாமிற்கு மைதான ஒதுக்கீடு என எடுத்துக்கொண்டாலும், 2 ஆட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அணிகள் இல்லாமல் சர்வதேச மைதானங்களை வைத்துள்ள கேரளா, மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா போன்ற மாநில மைதானங்களுக்கும் ஒரேயொரு ஆட்டம் ஒதுக்கி இருக்கலாம். ஆனால் ஐபிஎல் நிர்வாகம் அவ் வாறு ஏன் செய்யவில்லை என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.