நாக்பூர் டெஸ்ட் போட்டி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மகா ராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர் ஜடேஜாவின் (5 விக்.,) பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மாவின் (120) அபார சதத்தின் உதவியால் 139.3 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக முர்பி 7 விக்., வீழ்த்தினார். 223 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்தி ரேலிய அணி இந்திய வீரர் அஸ்வின் (5விக்.,) பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 32.3 ஓவர்களில் வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து, 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஜடேஜா (7 விக்., - 70 ரன்கள்) ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஜடேஜாவிற்கு 25% அபராதம்
முதல் நாள் போட்டியில் ஜடேஜாவும், ரோஹத் சர்மாவும் பேசிக்கொண்டிருந்த பொழுது, பந்தை வைத்திருந்த ஜடேஜா, முகமது சிராஜிடம் இருந்து ஒன்றை வாங்கி தனது விரலில் தேய்த்தார். இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள்,பந்து வீச ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தது. ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்து, ஜடேஜா தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும்,அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது. சர்ச்சைக்கு உள்ளான இந்த விவகாரத்தில் துரித நட வடிக்கை எடுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) விதிகளை மீறியதாக ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்
இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணி கள் பங்கேற்று வரும் இந்த தொடரில், விடுமுறை நாளான ஞாயிறன்று கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான இந்தியா (குரூப் பி) தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டங்கள்
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன்
இலங்கை - வங்கதேசம்
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (இரண்டு ஆட்டங்களும்)
தேசிய பேரிடர் அறிவித்த தென் ஆப்பிரிக்கா அரசு
உலகக்கோப்பைக்கு நெருக்கடியா?
தென் ஆப்பிரிக்காவில் நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, அரசுக்கு சொந்தமான மின் நிறு வனமான “எஸ்காம்” ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை மின்வெட்டுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் மின்சாரப் பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கியுள்ள நிலையில், தேசிய பேரிடர் நிலையை அறிவித்தார் அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோச. மின்வெட்டு அறிவிக்கப்பட்டதால் மகளிர் உலகக்கோப்பைக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காரணம் உலகக்கோப்பை ஆட்டங்கள் அனைத்தும் இரவில்தான் நடைபெற்று வருகிறது. அதிக யூனிட்கள் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதால் மின்சாரப் பற்றாக்குறை உலகக்கோப்பை தொடருக்கு பாதிப்பை ஏற் படுத்துமா இல்லை எரிபொருள் ஜெனரேட்டர் மூலம் வேறு ஏதும் வகை செய்ய உள்ளனரா? என்பது குறித்து தெளிவாக ஏதும் தெரியவில்லை.