games

img

விளையாட்டு...

ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஊக்கமருந்து சோதனை

சர்ச்சையில் சிக்கும் உலக நீர் விளையாட்டு பிரிவு

விளையாட்டு உலகில் முக்கியமானது ஊக்கமருந்து சோதனை. வீரர் - வீராங்கனைகள் தங்கள் விளையாட்டில் சாதிக்க மெருகூட்டப்பட்ட மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த ஊக்க மருந்துகளால் கடினமான கற்கள் போன்ற தசை, வலி இல்லா ஓட்டம், சோர்வடையா நிலை, இயந்திரம் போன்ற செயல்பாடு, வீராங்கனைகள்  ஆண்க ளின் செயல்திறனை பெறுகின்றனர். இதனால் ஒவ்வொரு உலக மற்றும் சாதாரண நாடுகளின் விளையாட்டுத் தொடர் முடிவில் போட்டியில் பங்கேற்ற வீரர் - வீராங்கனைகளின் சிறுநீர், ரத்த மாதிரிகளை வைத்து ஊக்க மருந்து சோதனை மேற்கொள்வார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டிற்கான (2022) ஊக்க மருந்து சோதனை அறிக்கையை உலக நீர் விளையாட்டு சம்மேளனம் (வேர்ல்ட் அக்வாடிக்ஸ்) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில்  இதுவரை இல்லாத அளவில் ஒரே ஆண்டில் நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், நடன நீச்சல், திறந்த நீர் நீச்சல், ஹை டைவிங் போன்ற பிரிவுகளில் விளை யாடும் 101 நாடுகளின் கூட்டமைப்புகளில் இருந்து மொத்தம் 5,835 மாதிரிகள் (3,766 சிறுநீர் மற்றும் 2,069 இரத்த மாதிரிகள்)  சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பெண்கள் மட்டும் 50.7% பேர் சோத னைகளில் சிக்கியுள்ளனர். தனிப்பட்ட பிரிவில் 66% உடன் நீச்சல் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து வாட்டர் போலோ பிரிவில் 14% பேரும், திறந்த நீர் பிரிவில் 9% பேரும், நடன நீச்சல் பிரிவில் 5% பேரும், டைவிங் மற்றும் ஹை டைவிங்  பிரிவில் 4% பேரும் சோதனைகளில் சிக்கி யுள்ளனர். 

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ்

சிறிய மைதானங்களால் திணறும் வீரர்கள்

களிமண் தரையில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடரான மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான மோனகோவின் (தன்னாட்சி) மான்டே கார்லோ கன்ட்ரி பகுதியில் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறிய மைதானங்களால் வீரர்கள் கடுமையாக திணறி வருகின்றனர். அதாவது பின்புற கோர்ட் நீளம் மிகக்குறைவாக உள்ளது. இதனால் எகிறும் பந்துகளை வீரர்கள் பின்னோக்கி நகர்ந்து அடிக்க முடியா மல் திணறுகின்றனர். முக்கியமாக கிரீஸ் நடுவர்கள் ஒரு வித பயத்துடனேயே ஒவ்வொரு பந்தையும் கணிக்கின்றனர். காரணம் நடுவர்களுக்கு மிக அருகே சென்று வீரர்கள் பந்தை திருப்புகின்றனர். ஒருபக்கம் மிக நீளமாகவும், ஒருபக்கம் குறைவான நீளமாக இருப்ப தால் வீரர்களுக்கு இடையே சாதக, பாதக சூழல் உருவாகிறது. 

கனடா பேஸ்பால் போட்டியின் நடுவே  “நாட்டு நாட்டு” பாடல்

கடனா நாட்டில் முக்கிய நகரமான டொ ரண்டோவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டிக்கு இடையே இந்திய திரைப்படமும், ஆஸ்கர் விருது பெற்ற பாடலுமான “நாட்டு நாட்டு” (ஆர்ஆர்ஆர் திரைப்படம்) பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பாடலுக்கு ஏற்ப மைதா னத்தில் நடன கலைஞர்கள் மாஸ்கட் உருவம் அணிந்த பொம்மைகளை அணிந்து நடனமாடினர்.

இன்றைய ஆட்டம்

ஐபிஎல் - 2023

மும்பை - கொல்கத்தா
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : மதியம் 3:30 மணி

குஜராத் - ராஜஸ்தான்
இடம் : அகமதாபாத், குஜராத்
நேரம் :  இரவு 7:30 மணி