games

img

டிக்ளருக்கு அழைத்தது யார்?

இங்கிலாந்து அணிக்கெதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் பொழுது தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (214), சர்பிராஸ் கான் (68) ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அழைக்காமலேயே, வேறு ஒரு வீரரின் (அவர் யாரென்றே தெரியவில்லை) தவறான அழைப்பின் காரணமாக இருவரும் டிக்ளர் செய்யப்பட்டதாக பெவிலியனை நோக்கி  வந்தனர். 
ஜெய்ஸ்வால் - சர்பிராஸ் கான் திடீரென பெவிலியன் நோக்கி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா,”எதற்கு இவர்கள் வருகிறார்கள்” என்று ஜடேஜாவிடம் கேட்டுள்ளார். ஜடேஜா,”எனக்கு தெரியாது” என்று கூற, ரோகித் சர்மா நீங்கள் வர வேண்டாம் தொடர்ந்து ஆடுங்கள் என்று சைகையில் கூறினார். 
ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. மாற்று வீரரான அக்சர் படேல் மூலம்  தொடர்ந்து விளையாட உத்தரவிட்டார். அக்சர் படேல் கூறியது இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் காதில் விழ, அவர் கோபத்தில் முறைக்க, வேறு வழியின்றி டிக்ளர் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால் இறுதிவரை ஜெய்ஸ்வால் - சர்பிராஸ் கானுக்கு டிக்ளர் உத்தரவிட்டது யார் என்று தெரியவில்லை. ரோகித் சர்மா சர்பிராஸ் கான் சதமடிக்கும் வரை விளையாடட்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.