games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், லீக் ஆட்டங்களின் களைப்பை போக்க உலகக்கோப்பை தொடருக்கு திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

 அரையிறுதி ஆட்டங்கள்

முதல் அரையிறுதி (15.11.2023 - புதன்)

இந்தியா - நியூஸிலாந்து
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா

2வது அரையிறுதி (16.11.2023 - வியாழன்)

ஆஸ்திரேலியா  - தென் ஆப்பிரிக்கா
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா, மேற்கு வங்கம்

வெளியேறிய அணிகளும்... காரணங்களும்... (1)

நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், சொதப்பலான ஆட்டம் மற்றும் பார்ம் பிரச்சனை காரணமாக முன்னாள் சாம்பியன் உட்பட 6 அணிகள் வெளியேறின. அந்த அணிகள் வெளியேறிய விதம் காரணங்களை காணலாம்:

பாகிஸ்தான்
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமான வீரர்களுடன் களமிறங்கினா லும், பேட்டிங் பிரிவில் மட்டுமே வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட னர். பந்துவீச்சில் அந்நாட்டு வீரர்கள் மிக மோசமாக செயல் பட்டதன் விளைவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதற்கு காரணம் ஆகும். முக்கியமாக இந்திய அணியிடம் தோல்வி கண்ட பிறகு பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான பார்ம் பிரச்சனையில் சிக்கினர். மேலும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் அணி  வீரர்கள், அதன்பிறகு மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி னர். இப்படி பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் அணி வெளியேறியது.

ஆப்கானிஸ்தான்
இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணி கடந்த கால உல கக்கோப்பை சீசனை விட, நடப்பு சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத் தியுள்ளது.  முன்னாள்  சாம்பியன்களான இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அசத்தலாக செயல்ப ட்டுள்ளது. மேலும் 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெற்றுள் ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் வெற்றி அருகே சென்று தோல்வியை தழுவியதால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி விடைபெற்றது.

இங்கிலாந்து
 

நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தரமான வீரர்கள் இருந்தும் இந்திய ஆடுகளங்களை சரியாக கணிக்காமல் விளையாடியதன் விளைவாக  தொடர் தோல்விகளை சந்தித்தது.  முக்கியமாக ‘நாங்கள் சாம்பியன்’ எங்களை எந்த அணி யும் ஒன்றும் செய்ய முடியாது என்ற செருக்கான ஆட்டத்தால் இளம் அணிகளிடம் கூட அடிமேல் அடிவாங்கி தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

நாளை... வங்கதேசம்.. இலங்கை... நெதர்லாந்து...