உருது மொழி பேசினால் எங் களை படிக்காதவர்கள் என் கிறார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஷதாப் கான்,”கால்பந்து வீரர் மெஸ்ஸி ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் பிரச்சனை இல்லை. வெளிநாட்டு வீரர் கள் தவறாக ஆங்கிலம் பேசினாலும் தவ றில்லை. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் தாய்மொழியான உருது மொழியை பேசி னால் எங்களை படிக்காதவர்கள் என்கிறார்கள்” என காட்டமாக பதிவிட் டுள்ளார்.
என்ன பிரச்சனை?
ஷதாப் கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் உருது மொழியில் ஒரு பதிவை பதிவிட்டார். அவரது பதிவை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஆங்கிலம் தெரியாது போல என கிண்டலடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து காட்டமாக ஆங்கிலத்தில் பதி விட்டு பதிலடி கொடுத்துள்ளார். ஷதாப் கானின் பதிலடி கருத்துக்கு கிரிக்கெட் உலகமின்றி பல்வேறு தரப்புகளும் வாழ்த்துக்களுடன் பாராட்டுகளை தெரி வித்து வருகின்றனர்.