games

img

விளையாட்டு

இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டி வேண்டாம் : ஐசிசி கைவிரிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் 4ஆவது சீசன் இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை யை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நிராகரித்துவிட்டதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.  வானிலை சூழல், ரசிகர்கள் வரு கை, நிர்வாக எளிமை என அனைத் திற்கும் இங்கிலாந்து சாதகமாக உள்ளது. அதனால் இங்கிலாந்தில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என ஐசிசி நிர்வாக கூட்டத்தில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஜெய்ஷா இருந்தால்  எல்லாம் கிடைத்துவிடுமா? ஐசிசி தலைவராக ஒன்றிய அமைச் சர் அமித் ஷா மகன் ஜெய்ஷா இருப்ப தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தை அகமதா பாத்தில் நடத்தி கல்லா கட்டலாம் என குஜராத் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ மூலம் காய் நகர்த்தியது. ஆனால் ஜெய்ஷா தலை வராக இருந்தாலும், ஐசி சியின் முழு கட்டுப்பாடும் அவரிடம் இல்லை. உலகளவிலான நிறைய பேர் ஐசிசி நிர்வாகக்குழுவில் உள்ள னர். இதனால் ஜெய்ஷா தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது.  ஜெய்ஷா ஆலோசனை கூறி னாலும் நிர்வாகக்குழு ஒத்துழைத் தால் மட்டுமே  அது உத்தரவாக மாறும். இதனால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் இந்தியாவிற்கு கிடைக் காமல் போயிருக்கலாம்.

செப்டம்பர் 30இல் மகளிர் உலகக்கோப்பை தொடக்கம் அட்டவணையை அறிவித்த ஐசிசி

13ஆவது சீசன் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடர் இந்தியாவின் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் நாடு களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பங்கேற்கும் அணிகள் : ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.  பாகிஸ்தான் ஒருவேளை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி தகுதி பெற்றால் அந்த போட்டி கொழும்புவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்து கிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.

டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்

திருச்சி   -  கோவை

நேரம் : இரவு 7:15 மணி இடம் : வாழப்பாடி, சேலம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)