games

img

விளையாட்டு...

ஹோட்டல் அறையில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்:
இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

இந்திய அணி அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்திய அணி முன்னாள் வீரர் கவாஸ்கர், “ஹோட்டல் அறையில் நேரத்தை வீண டிக்க வேண்டாம்” என இந்திய வீரர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்திய வீரர்கள் அனை வரும் அடுத்த 2 நாட்களை பயிற்சிக்காக பயன்படுத்துங்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாட வந்து இருப்பதால், ஹோட் டல் அறையில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இனி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடராக பாருங்கள். 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதை மறந்துவிடுங்கள். பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளில் விளை யாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் வேலைப்பளு என்ற பேச்சிற்கே இடமில்லை. அவர் காயமடையவில்லை என்றால், கட்டாய மாக 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளை யாட வேண்டும்” என அவர் கூறினார்.

 பிங்க் பந்துகளை கவனிக்க முடியாதா?

ஆஸ்திரேலிய நாட்டின் பரிந்து ரையின் பேரில் நடத்தப்பட்டு  வரும் பகலிரவு டெஸ்ட் போட்டிக் காக பிங்க் (இளஞ்சிவப்பு) வண்ணப் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரவு நேர வெளிச்சத்தில், சாதா ரண டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத் தப்படும் அடர்சிவப்பு “கார்க்” பந்துகள் சரியாக கண்ணில் புலப்படாது என்ப தற்காக பிங்க் நிறப் பந்துகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படு கின்றன. 

பிங்க் நிறப் பந்துகளில் விளையாடு வது சற்று சிரமமான காரியம் தான். பகலில் நன்றாக தெரியும். ஆனால் இரவு நேரங்களில் சற்று மிளிர்ந்து காணப் படும். அதாவது இரவு நேரங்களில் வாக னங்களின் முகப்பு விளக்குப் போன்று தென்படும். நாம் தொலைக்காட்சியில் இருந்து பார்த்தால் ஏதோ சீரியல் பல்பு போன்று பிங்க் பந்துகள் தெரியும். இத னால் தான் பிங்க் பந்துகளில் ஆஸ்தி ரேலியாவைத் தவிர மற்ற நாடுகள் திணறி வருகின்றன.

ஆஸ்திரேலியர்கள்
மட்டும் எப்படி?

பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஐசிசி-க்கு பரிந்துரைத்த நாடு என்ற  அடிப்படையில், பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பரவலாக்க ஆஸ்திரே லியா பிங்க் பந்து ஆட்டங்களை தங்கள் நாட்டில் அதிகமாக நடத்தி வருகிறது. சர்வதேச வீரர்களுக்கு அடிக்கடி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க வைக்கிறது. மேலும் முதல்தர மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளை நடத்தி, பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு என்று புதிய வீரர்களை உரு வாக்குகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த திட்டத்தில் உருவானவர் தான்  அடிலெய்டு டேட் போட்டியில் விளை யாடிய மிக்ஸ்வீனி ஆவார். 

இதனால் தான் ஆஸ்திரேலியா பிங்க் பந்துப் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறது. போதுமான ஆட்டங்களில் விளையாடியுள்ளதால் ஆஸ்திரேலியாவைப் போன்று இங்கி லாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பி ரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பிங்க்  பந்துகளில் ஓரளவு நன்றாக விளையா டும். ஆசியக் கண்டத்தில் போதுமான விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் இல்லாத தால் பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் நடத்துவதில்லை. இதனால் தான்  இந்தியா போன்ற நாடுகள் ஆஸ்திரே லியாவில் நடைபெறும் பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக திணறி தோல்வியை சந்தித்து வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சிராஜ், டிராவிஸ் ஹெட் மீது ஐசிசி நடவடிக்கை?

அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல்  இன்னிங்சில் அதிரடியாக விளை யாடிய ஆஸ்திரேலியாவின் டிராவில் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களை புரட்டியெடுத்தார். ஆட்டமிழந்த பின் டிராவிஸ் ஹெட், “அருமை யான ஸ்விங்” என்று சைகை  மூலம்  பாராட்டு தெரிவிப்பது போன்று கையை காண் பித்தார். ஆனால் தன்னுடைய பந்து வீச்சை புரட்டியெடுத்த கடுப்பில் சிராஜ்,  டிராவிஸ் ஹெட்டை “வெளியே செல்” என கத்தினார். பதிலுக்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை கடிந்துவிட்டு பெவிலியன் திரும்பினார். போட்டி முடிந்த பின் இரு வீரர்களும் தங்களது செயல்களை நியாயப்படுத்தினர். இந்நிலையில், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சிராஜ், டிராவிஸ் ஹெட் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடிலெய்டில் மைதானத்தில் நடந்த மோதல் சம்பவம் கார ணமாக சிராஜ், டிராவிஸ் ஹெட் மீது போட்டி தடை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. ஆனால் அபராதம் வடிவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி கூறிய தாக தி டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.