விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் 13-ஆவது சீசன் இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை, இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
உலகக்கோப்பை தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும், அபாயகரமான அணி என்றாலும் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கையை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் முதல் வெற்றியை ருசிக்கும் ஆஸ்திரேலிய அணியும், 2-வது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் டாப் ஆர்டரில் முன்னே றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால், தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 10-ஆவது லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : ஏக்கானா மைதானம், லக்னோ
மழை : லேசான வாய்ப்புள்ளது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
பேட்டிங்கில் மிரட்டும் இலங்கை
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொட ரில் இலங்கை அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வி யை தழுவியது. தோல்வியை தழுவினா லும் இலங்கை அணி 2 ஆட்டங்களிலும் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடியது. தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்ட த்தில் 428 ரன்களை துரத்திய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க வீரர்களின் மிரட்ட லான பந்துவீச்சை சமாளித்து 326 ரன்கள் வரை குவித்தது. அதே போல பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் கள் முடிவில் 9 விக்., இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. எனினும் சொதப்பலான பந்து வீச்சு காரணமாக பாகிஸ்தான் அணியிடம் தோல்விகண்டது. பேட்டிங்கில் இலங்கை அணி சூப்பர் பார்மில் இருந்தாலும், பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் இலங்கை வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. பந்துவீச்சு திறனை மாற்றிக்கொண்டால் இலங்கை அணி சாம்பியன் பட்டம் கூட வெல்லலாம்.
“ஜார்வோ” மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல யூடியூப் வருமானத்திற்காக நுழைகிறார்
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரான டேனியஸ் ஜார்வோ இந்திய கிரிக் கெட் அணியின் தீவிர ரசிகர். இந்திய அணி விளையாடும் ஆட்டங்களில், இந்திய அணியின் மாடல் ஜெர்சி யை அணிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் செய்ய மைதானத்து க்குள் புகுந்து விடுவார். சுமார் ஒரு நிமிடம் மைதானத்தில் இருப்பார். பாதுகாப்பு பணியாளர்கள் பிடித்து இழுத்தவுடன் அவராகவே சென்று விடுவார். இந்திய அணி இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி யில் விளையாடிய பொழுது சில ஆட்டங்களில் ஜார்வோ மைதா னத்திற்குள் களமிறங்கினார். இத னால் ஜார்வோ களமிறங்கிய மை தான நிர்வாகங்கள், மைதானத்தில் நுழைய ஜார்வோவிற்கு இடைக் கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உல கக்கோப்பை தொடரிலும் ஜார்வோ களமிறங்கிவிட்டார். சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணி க்கு எதிரான போட்டியின் பொழுது, இந்திய அணி பீல்டிங் செய்த நேர த்தில் ஜார்வோ களமிறங்கினார். இந்திய அணியின் ஜெர்சியை அணி ந்து கொண்டு இந்திய வீரர்களுடன் நிற்க, பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் டேனியஸ் ஜார்வோ இனி உலகக்கோப்பை தொடரை நேரடியாக மைதானத்திற்குள் கண்டுகளிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஜார்வோவின் செயலால் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைக்கின்றனர். ஆனால் அவர் மிகவும் புத்திசாலி. யூடியூப் வருமானம் ஆண்டுக்கு லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார். ஜார்வோ யூடியூப் வருமானத்திற்காகவே கிரிக் கெட் மைதானத்தில் களமிறங்கு கிறார். மேலும் இவர் பிராங்க் (PRANK) என அழைக்கப்படும் பொது மக்களை அச்சுறுத்தி கேளிக்கை செய்யும் நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். பிராங்க் நிகழ்வுகளில் போதுமான வருமானம் கிடைக் காததால் டேனியஸ் ஜார்வோ மை தான நுழைவு யுக்தியை கையிலெடு த்துள்ளார். தற்போது உலகின் பிர சித்திபெற்ற யூடியூபராக டேனியஸ் ஜார்வோ உள்ளார்.