இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சா ளர் முகமது ஷமி மீது 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஹசின் ஜஹான், விபச்சாரம் மற்றும் குடும்ப துஷ்பிரயோகம், கொலைமுயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்குவங்க ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மனைவியின் குற்றச்சாட்டை ஷமி மறுத்த நிலையில், மேலும் 2018-ஆம் ஆண்டு மாதாந்திர ஜீவனாம்சம் ரூ.10 லட்சம் கோரி ஹசின் கொல்கத்தா நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்நிலையில், முகமது ஷமி - ஹசின் ஜஹான் ஜீவனாம்ச வழக்கு தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்,”பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க வேண்டும். ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவ னாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும்” என கொல்கத்தா நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.