ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே நகரில் உள்ள மைதானங்களில் மட்டுமே லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வீரர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க ஆடுகளத்தின் தரை பகுதி பெவிலியனில் இருந்து போட்டியை ரசிக்க ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே உள்ள பெவிலியன்களில் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். மும்பை நகரில் உள்ள பிராபோர்ன், வான்கடே, பாட்டில் ஆகிய 3 மைதானங்களிலும், புனே நகரில் உள்ள மராட்டிய சங்க மைதானம் என 4 மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த 4 மைதானங்களில் பெவிலியன் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தின் விஜய் மெர்ச்சந்த் பெவிலியன் இருக்கைகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அதாவது மாடி படி போன்று 5 மற்றும் 6 வரிசைகள் மேல்நோக்கி அமைக்கப்பட்டு, படிவரிசைகளில் குறுகிய இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு வரிசையிலும் ரசிகர்கள் கீழே விழாமல் இருக்க பைப் (குழாய்) போன்ற அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. அவசர கோலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெவிலியனில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் நிற்கிறார்கள். அங்கு இருந்து உட்கார்ந்து பார்த்தால் சரியாக போட்டியின் நிகழ்ச்சி தெரியாததால் அவர்கள் உட்காரமாட்டார்கள். நின்று கொண்டு தான் போட்டியை ரசிப்பார்கள். கீழே விழக்கூடாது ஏற்பதற்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு குழாயில் ஏறி நின்று விக்கெட், சிக்ஸருக்கு துள்ளி குதிப்பார்கள். ஆடுகளத்தின் பிட்ச் பகுதி கேமராவில் இருந்து அந்த பெவிலியனை பார்த்தால் ரசிகர்கள் ஏதோ மலையின் சரிவில் நின்று சாகசம் செய்வது போல இருக்கும். கீழே வீழ்ந்தால் ஏறக்குறைய உடலில் அனைத்து வகையான முறிவுகள் ஏற்படும். கிரிக்கெட் போட்டியை காணுவதற்கு வசூலிக்கப்படும் டிக்கெட்டின் விலை எப்பொழுதும் போல தரமாக உள்ளது. ஆனால் ஆடுகள நிலை தான் ஆப்பிரிக்கா நாட்டின் ஸ்டைலில் உள்ளது. விளையாட்டு தொடர்பான பொருளாதார வளர்ச்சியில் சரிவில் உள்ள ஆப்பிரிக்கா நாடுகளில் தான் இந்த வகையான பெவிலியன்கள் அமைக்கப்படும். ஆனால் கிரிக்கெட் உலகில் வசதி படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம் இவ்வகையான பெவிலியன்கள் அமைத்து இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.