games

img

விளையாட்டு - உலகக்கோப்பை தோல்வி எதிரொலி

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து துரத்த பிசிசிஐ திட்டம்?

13-ஆவது சீசன் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வியை சந்திக்கா மல் இறுதி வரை முன்னேறி, இறுதி  ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து கோப்பையை பறிகொடுத்தது. இந்நிலையில், அடுத்தாண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் கூட்டாக நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன் பொறுப்பு தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா கூறுகை யில்,”அடுத்தாண்டு ஜூன் மாதம்  நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன் பதவி குறித்து இப்போது முடிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன?.  ஆப்கானிஸ்தான் தொடருக்கு பிறகு பார்க்கலாம்” என காட்டமாக பேசியுள் ளார். இவரது பேச்சை உற்றுநோக்கி னால் வரவிருக்கும் டி-20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

யார் கேள்வி எழுப்பினார்கள்?  ஜெய் ஷா யாருக்கு பதில் சொன்னார்?

பிசிசிஐ தலைவர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உடன் கலந்துரையாடி அதன்பிறகுதான் கேப்டன் பொறுப்பு குறித்த தகவல் பொது வெளியில் பேசப்படும். ஆனால் 9-ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணி கேப்டன் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தானாகவே பேசியுள்ளார். அவரிடம் கேள்வி எழுப்பியது யார்? இவர் யாருக்கு பதில் கூறினார்? என என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.

வழிவிடுமா மழை?

இன்று 2-ஆவது டி-20 ஆட்டம்
டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்ப தற்காக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-ஆவது ஆட்டம் செவ்வாயன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம்படையுடன் கள மிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய அணி சூர்யகுமார் தலை மையிலும், தென் ஆப்பிரிக்க அணி மார்க்ராம் தலைமையில் களமிறங்குகிறது. 

இந்தியா

தென் ஆப்பிரிக்கா

சேனல் : ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை. சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)

இடம் : செயின்ட் ஜார்ஜ் பார்க், பெர்ஹா

புரோ கபடி லீக் 2023

இன்றைய ஆட்டம்

பெங்கால் - பாட்னா

இரண்டு ஆட்டங்களும் : கண்டிவீரா மைதானம்,பெங்களூரு, கர்நாடகா

சர்ச்சையை ஏற்படுத்தும் பெங்காலின் தடுப்பாட்டம்

புரோ கபடி நட்சத்திர அணிகளில் ஒன்றான பெங்கால் வாரியர்ஸ் அணி கடந்த காலங்களை போலவே நடப்பு சீசனிலும் மணிந்தார் சிங் தலைமை யில் பலமான அணியாகவே களமிறங்கியுள்ள நிலையில், தடுப்பாட்ட முறையில் வீரர்க ளை தாக்குதல் ஏற்படுத்தும் முறையில் விளையாடி சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது ரெய்டு வரும் எதிரணி வீரர்களை காயம் ஏற்படுத்தும் முனைப்பில் தடுப் பாட்டத்தை அரங்கேற்றி வருகிறது. இதனை நடுவர்கள் எச்சரித்தாலும் அந்த அணி வீரர்கள் கண்டுகொள்வதில்லை. பெங்காலின் தடுப்பாட்ட முறை இதே நிலையில் தொடர்ந்தால் எதிரணி வீரர்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.