சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின்!
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பை தொட ரில் 3 சதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-ஆவது லீக் போட்டி யில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில், நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி 401 ரன் குவித்தது. அந்த அணி யின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா வழக்கம்போல அதிரடி யாக ஆடி 94 பந்துகளில் 15 பவுண்ட ரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 108 ரன் எடுத்தார். இது இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அடித்த 3-ஆவது சதமாகும். 23 வயதாகும் ரச்சின் இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் குறைவான வயதில் அதிக சத மடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25 வயதுக்கு முன்பாக, 1996- ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொ டரில் 2 சதங்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலை யில், 27 ஆண்டுகள் கழித்து சச்சி னின் சாதனையை ரச்சின் முறி யடித்துள்ளார். அதேபோல், 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் 532 ரன் குவித்திருந்தார். இன்றைய போட்டியில் ரச்சின் அந்த சாதனையையும் சமன் செய்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த 25 வயதுக்கு உட்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த போட்டியில் சச்சினின் அதிக ரன் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் ரச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரை இணைத்தே, இவருக்கு ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் அளவில் விலகியிருந்தாலும் மனதளவில் இணைந்திருப்பேன்...
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா வில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி புள்ளிப் பட்டிய லில் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்திய ரசி கர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரிலிருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமா காததால் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விலகு வதாக அறிவிக்கப் பட்டுள்ளார். கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற வங்கதேசத் திற்கு எதிரான மேட்ச்சின் போது, பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, பேட்ஸ்மேன் அடித்த ஸ்டிரைட் ட்ரைவ் பந்தை காலால் தடுக்க முயன்றார். அப்போது அவ ரது கணுக்காலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற் காமல் இருந்தார். இந்நிலை யில் அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவ தாக சனியன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “உல கக்கோப்பை தொடரிலி ருந்து விலகியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உடல் அளவில் விலகியிருந்தாலும் மனதள வில் நான் அணியுடன் எப் போதும் இணைந்தி ருப்பேன். ஒவ்வொரு ஆட் டத்தின் ஒவ்வொரு பந்துக ளின்போது இந்திய அணியை ஊக்கப்படுத்து வேன். இதுவரையில் எனக்கு ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த அணி எனக்கு சிறப்பு மிக்க ஒன்று. நிச்சய மாக நாங்கள் எல்லோ ரையும் பெருமைப்படும்படி செய்வோம்” என்று கூறி யுள்ளார்.
இன்றைய ஆட்டம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : பிற்பகல் 2.00 மணி
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம்.
புள்ளிப் பட்டியலில் 7 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், 6 வெற்றிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான போட்டி என்பதால், இந்தப் போட்டி
யில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)