games

img

துருக்கி நிலநடுக்கம் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயம்

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் திங்களன்று அடுத்த டுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கங்களால் தெற்கு  துருக்கி, சிரிய - துருக்கி எல்லை பகுதி கள் உருக்குலைந்தன. இருநாட்டிலும் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், கானா நாட்டின் பிரபல கால்பந்து வீரரும், துருக்கி கிளப் அணியான ஹட்டாய்ஸ்பர் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியன் அட்சு, ஹட்டாய்ஸ்பர் கிளப்  இயக்குநர் டானர் சவூத் நிலநடுக்கத்தால் மாயமாகி யுள்ளனர். இவர்கள் இருவரை மட்டுமே இன்னும் காணவில்லை மற்ற வீரர்கள்  பாதுகாப்பாக உள்ளனர் என ஹட்டாய்ஸ்பர் கிளப்பின் செய்தி  தொடர்பாளர் முஸ்தபா ஓசத் தெரி வித்துள்ளார். கானா தேசிய அணிக்காக விளையாடிய கிறிஸ்டியன் அட்சு, ஐரோப்பிய கிளப் அணியான செல்சியா, நியூகேஸ்டில் அணிக்காக வும் விளையாடியுள்ளார். கிறிஸ்டியன் அட்சு மாயமானது தொடர்பாக கானா  வெளியுறவுத்துறை துருக்கி அதி காரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.