games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

இன்றுடன் காலிறுதி ஆட்டங்கள் நிறைவு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று காலிறுதி ஆட்டங்கள் நிறைவு பெறு கின்றன. சனியன்று 2  காலிறுதி ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகளும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - கொலம்பியா அணிகளும் மோதுகின்றன.

சேனல் : தூர்தர்ஸன் ஸ்போர்ட்ஸ், பேன் கோடு (ஒடிடி)

ஆஸ்திரேலியா - பிரான்ஸ் 
வெற்றி வாய்ப்பு 

நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா

இரு அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என திடமாக கணிப்பு எதுவும் கூற முடியாது என்றாலும், பிரான்ஸ் அணிக்கு சற்று கூடுதல் சாதகம் உள்ளது. காரணம் அந்த அணியின் வீராங்கனைகள் ஒற்றுமையுடன் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி பிரான்ஸை விட சற்று பலம் குறைந்த அணி என்றாலும், உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து - கொலம்பியா
வெற்றி வாய்ப்பு 

நேரம் : மாலை 4:00 மணி இடம் : சிட்னி, ஆஸ்திரேலியா இரு அணிகளை ஒப்பிடுகையில் இங்கிலாந்து அணி சற்று வலுவான நிலையில் உள்ளது. இதனால் அந்த அணி எவ்வித எதிர்ப்பின்றி அரையிறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகள் இருந்தாலும், கவனமாக, மிகவலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். காரணம்  கொலம்பியா வீராங்கனைகள் அனைவரும் இளசுகள். லீக் மற்றும் நாக் அவுட்டில் மூர்க்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். காலிறுதியில் அதே பாணி யிலான ஆட்டத்தை கையிலெடுத்து இங்கிலாந்து அணியை வீழ்த்த தீவிர பயிற்சியுடன் களமிறங்கவுள்ளது. இதனால் இங்கிலாந்து  அணி மிக கவனமாக விளையாடினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். இல்லையென்றால் கொலம்பியா அதிர்ச்சி வெற்றி யுடன் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் ஸ்பெயின்

வெள்ளியன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் (90 நிமிடங்கள்) 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டன. கூடுதல் நிமிடத்தின் (30 நிமிடம்) 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோலடித்தது. அதன் பிறகு நெதர்லாந்து அணி தீவிர முயற்சி செய்தும் பதிலுக்கு கொலடிக்க முடியவில்லை. இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. கடந்த சீசனில் 2-ஆம் இடம் பிடித்த நெதர்லாந்து அணி காலிறுதியுடன் பரிதாபமாக வெளியேறியது.

புளோரிடா
தொடரை சமனில் நிறுத்துமா இந்தியா?
இன்று 4-வது டி-20 ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் 3 ஆட்டங்களின் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 4-வது டி-20 போட்டி சனியன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முன்னேறும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பதிலடி கொடுத்து 5-வது டி-20 ஆட்டம் வரை தொடரை சுவாரஸ்யமாக நகர்த்தும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 4-வது டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - 
மே. இ. தீவுகள்
இடம் : புளோரிடா மைதானம், அமெரிக்கா
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா