விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
2 நாட்கள் விடுமுறை
பரபரப்பாக நகர்ந்து வரும் 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடுகட்டத்தை தாண்டியுள்ளது. வெள்ளியன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், நாக் அவுட் சுற்று விளையாடிய களைப்பை போக்க புதன், வியாழன் என 2 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவை புரட்டியெடுத்த
நாக் அவுட் சுற்றின் 6-வது ஆட்டத்தில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான பிரேசில் அணி கணிக்க முடியாத ஆசிய சாம்பியன் அணியான தென் கொரி யாவை எதிர்கொண்டது. கத்தார் சீசனில் தென் கொரியா வின் வரலாற்றை நன்கு கணித்த பிரேசில் அணி ஆட்டத்தின் 4-வது நிமிடத்தின் முதலே கோல் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் பலனாக 7-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினி கோல் கணக்கை துவக்கி வைத்தார். தொடர்ந்து 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பிரேசில் கேப்டன் நெய்மார் கோல டிக்க, அடுத்த 16 நிமிட இடைவெளியில் கத்தார் உலகக்கோப்பையின் அதி ரடி மன்னன் என வர்ணிக்கப்படும் பிரேசில் முன்கள வீரர் ரிச்சர்லிசன் (29-வது நிமிடம்) தந்திரமாக கோலடித்தார். 36-வது நிமிடத்தில் லுகாஸ் மேலும் ஒரு கோலடிக்க முதல் பாதி முடிவடைவதற்குள் தென் கொரியா அணியை 4-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்தது பிரேசில். ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் இரண்டாம் பாதியில் தாக்குதலை குறைத்து, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களை களமிறக்கியது பயிற்சி ஆட்டம் போல விளையாடியது பிரேசில். ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் தென் கொரியா வீரர் சீயுங் மிரட்ட லான வேகத்தில் அதிரடி கோலடித்தார். இந்த கோல் கார்னர் பகுதியில் இருந்து மிகுந்த தொலைவில் அடிக்கப்பட்ட பிரம்மாண்ட கோலாகும். அதன்பின் பிரேசில் அணியின் தடுப்பு அரணை தாண்டி தென்கொரி யாவால் கோலடிக்க முடியவில்லை. 22-வது சீசனில் புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப் பட்ட தென்கொரியா அணி பிரேசிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
கவலைக்கிடமான நிலையில் பீலே... வெற்றியை சமர்ப்பித்த பிரேசில் வீரர்கள்...
தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கு 3 முறை (1958, 1962, 1970) உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) வயது முதிர்ச்சி காரணமாக பல்வேறு உடல் பிரச்சனைகளால் பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதில் கொரோனாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பீலே தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில், கத்தார் உலகக்கோப்பை சீசனில் காலிறுதி முன்னேற்ற வெற்றியை பீலேவுக்கு சமர்ப்பித்தனர் பிரேசில் வீரர்கள்.
காலிறுதி ஆட்டங்கள்
குரோஷியா - பிரேசில்
நாள் : டிசம்பர் 9-ஆம் தேதி
_ I _
அர்ஜெண்டினா - நெதர்லாந்து
நாள் : டிசம்பர் 10-ஆம் தேதி
_ I _
இங்கிலாந்து - பிரான்ஸ்
நாள் : டிசம்பர் 11-ஆம் தேதி
(செவ்வாயன்று
மாலை 5 மணி நிலவரம்)
கத்தாரில் முதல் பெனால்டி சூட் அவுட்
22-வது சீசன் தொடரில் 5-வது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் குரோஷியா - ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி நேரம் (90-வது நிமிடம்) வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்த தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோலடிக்காத தால் பெனால்டி சூட் அவுட் முறை கடை பிடிக்கப்பட்டது. களத்தில் (120 நிமிட) மோதும் பரபரப்பு ஆட்டத்தை பெனால்டி சூட் அவுட் மிஞ்சியது. மிக பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி சூட் அவுட்டில் 3-1 என்ற கணக்கில் குரோஷியா அபார வெற்றி பெற்று காலி றுதிக்கு முன்னேறியது. 22-வது சீசன் வரலாற் றில் கூடுதல் நேரம், பெனால்டி சூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்ட ஆட்டம் குரோசியா - ஜப்பான் ஆட்டமாகும்.
ரத்தம் கொதிக்கும் தருணத்தில் அசால்ட்டாக கலக்கிய லிவாகோவிச்
பெனால்டி சூட் அவுட் என்பது மிகவும் பதற்றமானது. கால்பந்து உலகில் எந்த காலகட்டத்திலும் சிறப்பாக செயல்படலாமே தவிர பெனால்டி சூட் அவுட்டில் செயல்படுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. புரியும்படி சொன்னால் பெனால்டி சூட்டில் இரு அணி வீரர்களும் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் அளவிற்கு இருப்பார்கள். இதில் முக்கிய காரணிகளாக இருக்கும் கோல் கீப்பர்கள் அதிக ரத்த கொதிப்பு டன் இருப்பார்கள். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில்தான் குரோ ஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் அசத்தலாக செயல்பட்டு குரோஷியா வை காலிறுதிக்கு கரையேற்றினார். ஜப்பானின் முதல் 2 பெனால்டி வாய்ப்புகளை அபாரமாக தடுத்தார். 3-வது வாய்ப்பை மட்டும் கோட்டை விட்ட லிவாகோவிச், அதற்கு பரிகாரமாக 4-வது பெனால்டியையும் தடுத்து குரோஷியா காலிறுதிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
விடை பெற்றது ஆசியா...
கத்தார் உலகக்கோப்பை சீசனில் ஆசி யக்கண்டத்தில் இருந்து 6 அணிகள் பங் கேற்றது. போட்டியை நடத்தும் அடிப்படை யில் கத்தார் நாடும், ஜப்பான், தென் கொரியா, சவூதி அரேபியா, ஈரான், ஆஸ்திரேலியா (உலகக்கோப்பையில் மட்டும் ஆசிய கண்டம்) என 6 அணிகள் களமிறங்கின. கால்பந்து பின்புலம் இல்லாத கத்தாரை தவிர மற்ற நாடுகள் அபாரமாக விளையாடின. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும் ஈரான், சவூதி அரேபியா நாடுகள் கடந்த காலங்களை விட நடப்பு சீசனில் ஆட்டத் திறனை மேம்படுத்தி அசத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு கள் லீக் சுற்றில் முன்னணி, சாம்பியன் அணி களுக்கு அதிர்ச்சி அளித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா - அர்ஜெண்டினா அணியிட மும், ஜப்பான் - குரோஷியா அணியிடமும், தென் கொரியா - பிரேசில் அணியிடமும் வீழ்ந்து நாக் அவுட் சுற்றில் இருந்து வெளி யேறியது. பொதுவாக தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா ஆகிய கண்ட அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை யில், நடப்பு சீசனில் ஆசிய கண்டங்களின் மிரட்டலான ஆட்டத்தால் மற்ற கண்ட நாடு கள் கதி கலங்கி போயின. முன்னாள் சாம்பி யன்களான உருகுவே அணியை தென் கொரியா அணியும், ஜெர்மனியை ஜப்பான் அணியும் லீக் வெளியேற்றி எங்களுக்கும் (ஆசியாவிற்கும்) கால்பந்தில் மிரட்ட தெரி யும் என நிரூபித்து மற்ற ஆசிய நாடுகளுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.