games

img

விளையாட்டு செய்திகள்

புரோ கபடி 2024

தடுப்பாட்டம் மூலமே சாம்பியன் வென்று வரலாறு படைத்த புனே அணி

கபடி விளையாட்டின் முக்கிய பிரிவாக இருப்பது ரெய்டு ஆகும். காரணம் கபடியில் ரெய்டு மூலமே எதிரணியை வீழ்த்துவதற்கான முக்கிய அடித்தளங்கள் கொண்ட ஆட்டமுறையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தடுப்பாட்டம் என அழைக்கப்படும் வீரர்களை மடக்கும் பிரிவு உள்ளது. இதுதான் கபடி விளையாட்டில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறை ஆகும்.

ஆனால் கபடி வரலாற்றிலேயே முதன்முறையாக நடப்பு சீசன் புரோ கபடி தொடரில் தடுப்பாட்டம் மூலமே ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது புனே அணி.

புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் வெள்ளியன்று நிறைவு பெற்ற நிலையில், இறுதி ஆட்டத்தில் புனே - ஹரியானா அணிகள் மோதின. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனே அணி 28 - 25 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றியது. 

கோப்பையை கைப்பற்றிய புனே அணி ரூ.3 கோடியை பரிசுத்தொகையாக வென்ற நிலையில், 2-ஆம் இடம் பிடித்த ஹரியானா அணி ரூ.1.5 கோடியை பரிசுத்தொகையாக வென்றது. 

ஹரியானா அணியின்  தோல்விக்கு பயிற்சியாளரே காரணம்

பயம் அறியா விளையாட்டாக கருதப்படும் கபடி மற்ற விளை யாட்டுகளை காட்டிலும் சற்று வித்தியாச மானது ஆகும். ஆட்டத்தின் ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் (ரெய்டு நேரம் அல்லது தடுப்பாட்ட நேரம்) வியூகம் அமைக்க வேண்டும் என்பதால் கபடி விளையாட்டில் பயிற்சியாளரின் பங்கு மிக குறைவுதான். அதாவது போட்டிக்கு முன்னர் வீரர்களுக்கு உத்தரவுகள், ஆலோசனைகள், பயிற்சி நுணுக்கங்களை வழங்குவதோடு அவ்வ ளவுதான். மேற்கொண்டு போட்டியில் இரண்டு முறை, 3 முறை ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சியாளர்கள் ஒன்றிரண்டு வியூகங்களை வகுத்துத் தரலாம். அதன்பிறகு கைதட்டல் வேலை மற்றும் கலங்கும் நிலை தான்.

மேலும், கபடி விளையாட்டின் ஒவ் வொரு 30 நொடிகளுக்கும்  பயிற்சியாள ரின் உத்தரவு இருந்தால் அது வீரர்க ளின் திறன் வெளிப்பாட்டில் சிக்கலை ஏற் படுத்தும். காரணம் கபடி விளையாட்டில் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆட்ட சூழ் நிலையை கணித்து, வீரர்களின் வியூகம் மற்றும் ஆட்டத்திறனுக்கு ஏற்ப ஆட்டத் திறனை  சமாளித்த பின்னரே போட்டிக்கு முன் பயிற்சியாளரின் தாக்குதல் உத்தர வுகள் இங்கு எடுபடுமா என வீரர்கள் சிந்திப்பார்கள். 

அதுமட்டுமல்ல, ஆட்ட நேரத்தில் கபடி வீரர்களுக்கு அதிக ஆலோ சனை தேவையில்லை. அவ்வாறு ஆலோ சனை கொடுத்தாலும், கொடுக்கப்படும் உத்தரவுகளை காதில் வாங்கிக் கொள்ளும் சூழல் இருக்காது. கபடி விளையாட்டின் தன்மை இவ்வாறு உள்ள நிலையில், ஹரியானா அணியின் பயிற்சியாளராக மன்ப்ரீத் சிங் நடப்பு சீசன் புரோ கபடி தொடரின் ஒவ்வொரு ரெய்டு, தடுப்பாட்டம் என அனைத்திலும் தனது அணி வீரர்களுக்கு ஆலோசனை என்ற பெயரில் தொடர்ச்சியாக கத்திக்கொண்டே ஆக்ரோஷமான கட்ட ளைகளை கொடுத்து அந்த அணி வீரர்களை அழுத்தத்தின் மூலம் இறுதி க்கு அழைத்து வந்தார். 

ஆனால் இறுதி ஆட்டத்தில் புனே அணியை சமாளிக்க முடியுமா? கோப் பையை கைப்பற்ற முடியுமா? என்ற இரண்டு முக்கிய கேள்விகளுடன் ஹரி யானா வீரர்கள் பதற்றத்தில் இருந்தனர். இந்த பதற்றத்தோடு பயிற்சியாளரின் வழக்கமான அழுத்தம் கூடுதல் பதற் றத்தை உருவாக்கிய நிலையில், அந்த அணி வீரர்கள் திடமான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி கண்டு புனே அணியிடம் கோப்பையை பறிகொடுத்துள்ளனர்.  

பயிற்சியர்களின் அதிரடி உத்தரவுக ளை ஒவ்வொரு 30 நொடியும் வீரர்க ளால் நிறைவேற்ற முடியாது என்பதை மன்ப்ரீத் சிங் உணராமல் வீரர்களுக்கு தொடர் அழுத்தத்தை கொடுத்துள்ளார். இறுதி ஆட்டத்தில் ஹரியானா அணி யின் தோல்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மன்ப்ரீத் சிங் தான் முக்கிய காரணமாகும்.