கேப்டவுன் ஆடுகள விவகாரம்
தகுதி இழப்பு புள்ளிகள் மட்டும் போதாது: விளக்கம் வேண்டும்
ஜனவரி 3-ஆம் தேதி இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரான கேப்டவுன் நியூ லாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் கணிக்க முடியாத அளவிற்கு மிக கடினமாக இருந்தது. அதாவது பிட்ச் பகுதிகளில் கூட புற்கள் காணப்பட்டதால் பந்து தாறுமாறாக எகிறியது. இதன் விளைவாக 147 ஆண்டுகால கிரிக்கெட் வர லாற்றில் வெறும் 647 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு 2 நாட்களில் இரண்டு இன்னிங்ஸ்களும் நிறைவு பெற்றதால், கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானம் நிலைமை தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் பொழுது போட்டி நடுவராக இருந்த கிறிஸ் பிராட்,”கேப்டவுன் ஆடுகளம் மிக கடினமாக இருந்தது. பந்து அச்சுறுத்தும் வகையில் எழும்பியது. பவுன்சர்கள் மோசமானதாக இருந்ததால் ஆடுகளத்தின் தன்மை யில் திருப்தி இல்லை” என சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ஐசிசி) விளக்க அறிக்கை கொடுத்தார். இந்த விளக்க அறிக்கை மூலம் கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்திற்கு ஐசிசி ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கியுள்ளது.
விளக்கம் வேண்டும்
மைதானம் தொடர்பான சர்ச்சை எழும் போதெல்லாம் ஐசிசி தகுதி இழப்பு புள்ளிகளை மட்டுமே வழங்குகிறது. ஆனால் மைதானத்தின் தன்மை மாறியதற்கு காரணம் மற்றும் விளக்க கூற்றுகளை கேட்டு மைதான நிர்வாகத்தி டம் கேட்பது கிடையாது.
மேலும் ஐசிசி தனியாக ஆய்வு செய்து அறிக்கையும் வெளியிடுவது கிடையாது. இந்த நிலைமை கண்டிப்பாக மாற வேண்டும். காரணம் மாறி வரும் காலநிலையால் உலக நாடுகள் பல்வேறு மாற்றங் களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட் மைதானங்களின் தன்மை முற்றிலும் மாறி வருகிறது. அதாவது உயிரோட்ட பவுன்சர் ஆடுகளங்கள் மந்தமாகவும், மந்தமான ஆடுகளங்கள் உயி ரோட்டமாகவும் மாறி வருகிறது. காலநிலை மாற்றங்கள் கிரிக்கெட் உலகில் இத்தகைய சிக்கலான சூழலை உருவாக்கி வரும் நிலையில், மைதான தன்மை தொடர்பாக இனிமேல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை
மார்ச் 22இல் ஐபிஎல்?
கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் தொடரான ஐபிஎல் தொட ரின் 17-ஆவது சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு, டிரான்ஸ்பர், மினி ஏலம் என அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மக ளிர் ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே யான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த தும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளன.
போட்டிகள் குறைப்பு
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், மார்ச் 3-ஆவது வாரத்தில் ஐபிஎல் போட்டி கள் நடத்தப்பட்டால், தேர்தல் கால பர பரப்புகளுக்கு மத்தியிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது. முக்கியமாக மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக ஒன்றிய அரசுடன் ஐபிஎல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
புரோ கபடி 2024 : இன்று விடுமுறை
குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்பொழுது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்று வந்த 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. இந்நிலையில் 7-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வெள்ளியன்று தொடங்கும் நிலையில், அணிகள் மற்றும் போட்டி நிர்வாகம் இடம்பெயர்வு மற்றும் இதர காரணங்களுக்காக வியாழனன்று புரோ கபடி தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.