தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்ற வெற்றியால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்தியாவின் பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர் கொண்டார். தொடர்ந்து அவருக்கு ஏற்பட்டதோடு, வலியுடன் விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
இதில் இந்திய அணி டென்மார்க்கை வீழ்த்தி முதல்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இந்தோனேஷியா அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்திய அணி 1952, 1955 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் தாமஸ் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. அந்த 3 முறையும் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.