22-வது உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், வியாழ னன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, ஆப்பிரிக்காவின் இளம் அணியான மொராக்கோவை எதிர்கொண்டது. ஒட்டுமொத்த கால்பந்து உலகமே அதிகம் எதிர்பார்த்த இந்த ஆட்டம் அல் பாயித் மைதானத்தில் நடை பெற்றது. மொராக்கோ அணியின் பாய்ச்சல் வேக வரலாற்றை நன்கு உணர்ந்த பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே தாக்குதலை தொடங்கியது. இதன் பலனாக ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹெர்னாண்டஸ் தந்திரமாக கோலடித்து அசத்தி னார். 9-வது நிமிடத்தில் கிடைத்த எளிய வாய்ப்பை மொராக்கோ வீணடித்தது. முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகிக்க, 2-ஆம் பாதியில் மொராக்கோ அணி தாக்குதல் அனல் பறந்தது. ஆனால் பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான லோரிஸ் மொராக்கோ வீரர்களின் தாக்குதலை தவிடு பொடி யாக்கினார். 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மாப்பேவின் அபார கடத்தலின் உதவி யால், ரான்டல் கோலோ கோலடிக்க மொராக்கோ வீரர்கள் மைதானத்திலேயே துவண்டு சரிந்தனர். மொராக்கோ ரசிகர்கள் கதறி அழுக ஆரம்பித்த னர். அதன் பிறகு ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை மொராக்கோ பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடிய வில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4-வது முறையாக...
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் பிரான்ஸ் அணி 4-வது முறையாக (1998, 2006, 2018, 2022) இறுதிக்கு முன்னேறி யுள்ளது. இதில் 1998 (பிரான்ஸ்), 2018 (ரஷ்யா) ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரான்ஸ், 1958 (ஸ்வீடன்), 1986-ஆம் ஆண்டு (மெக்ஸிகோ) தொடர்களில் 3-ஆம் இடமும், 1982-ஆம் ஆண்டு (ஸ்பெயின்) தொடரில் 4-ஆம் இடமும் பிடித்தது. மற்ற சீசன்களில் குரூப், நாக் அவுட், காலிறுதி சுற்றுகளில் வெளியேறியுள்ளது.
கலவரம்
பிரான்ஸ் அணி இறுதிக்கு முன்னேறியதை பாரிஸில் அந்நாட்டு ரசிகர்கள் பட் டாசு வெடித்துக் கொண்டா டினர். இந்த கொண்டாட்டத் தில் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்துள்ள ஆப்பிரிக்கர்கள் மொராக்கோவிற்கு ஆதரவாக கொண்டாட்டத்திற்குள் புகுந்து கலக்கத்தை உண்டாக்க, வெடித்தது மோதல். பிரான்ஸ் ரசிகர்கள் பட்டாசுகள் மூலம் தாக்குதல் நடத்த, ஆப்பிரிக்கர்கள் கல், தடிகளை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பாரிஸ் போலீசார் “கலக தடுப்பு காவலர்”களை களமிறக்கி வானில் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதலை தடுத்தனர். இந்த மோதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பெல்ஜியத்திலும் ஆப்பிரிக்க ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
மொராக்கோ வீரர்களுடன் பாச மழை பொழிந்த பிரான்ஸ் வீரர்கள்
2-வது அரையிறுதியில் முக்கிய சம்பவம் என்னவென்றால் பிரான்ஸ் அணி இறுதிக்கு முன்னேறியது என்பதை விட, ஆட்டம் முடிந்த பொழுது பிரான்ஸ் வீரர்கள் கொண்டாட்டங்களை குறைத்து மொராக்கோ வீரர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கட்டி அணைத்து ஆறுதல் வழங்கினர். பிரான்ஸ் நட்சத்திர வீரர் மாப்பே, மொராக்கோ அணியின் நட்சத்திர வீரர் ஹக்கீமுடன் ஜெர்சி மாற்றலில் ஈடுபட்டு பிரான்ஸ், மொராக்கோ ரசிகர்களிடம் பாராட்டு மழையை பெற்றார்.
மொராக்கோ அணியின் தோல்விக்கு காரணம்?
1. 5-4-1 என்ற லைன் அப்பில் களமிறங்கியதால் முன்களத்தில் சரியாக செயல்படவில்லை. இதுதான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். 5-4-1 என்ற லைன் அப் மூலம் தடுப்பாட்டத்தை வைத்து பெனால்டியில் சாதிக்கலாம் என கனவுடன் இறங்கியது தவறாக அமைந்தது
2. பிரான்ஸ் அணியின் பலமான தடுப்பாட்டம் மற்றும் கோல் கீப்பர் லோரிஸின் அனுபவத்தை குறையாக எடை போட்டு உதிரி ஷாட்களை விளாசியது. உதிரி ஷாட்களை பலம் வாய்ந்த பாஸ் ஷாட்களாக மாற்றியிருந்தால் மொராக்கோ 5 கோல்கள் போட்டிருக்கலாம்
3. கோல் கீப்பர் லோரிஸ் பல முக்கியமான ஷாட்களை தடுத்தது
4. 62% தனது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தாலும் கோலடிக்க வியூகம் அமைக்காமல் இருந்தது. பிரான்ஸ் 32% மட்டுமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் ஷாட்களில் பிரம்மாண்டமாக அசத்தியது
5. முன்கள வியூகத்தை விட்டு பிரான்ஸ் வீரர்களை தடுமாற வைக்க பல்வேறு வியூகம் அமைத்தது. மொராக்கோ வீரர்களின் தடுப்பாட்ட தாக்குதல் வியூகத்தை நன்கு கணித்த பிரான்ஸ் வீரர்கள் கங்காரு போல தவ்விச் சென்று ஆதிக்கம் செலுத்தினர்.
இன்னும் 2 நாட்கள்...
இறுதி ஆட்டம்
அர்ஜெண்டினா - பிரான்ஸ்
நாள் : டிசம்பர் 18-ஆம் தேதி -
இரவு 8:30 மணிக்கு
இடம் : லுஸைல்
நாளை...
3-வது இடத்திற்கான ஆட்டம்
குரோஷியா - மொராக்கோ
நாள் : டிசம்பர் 17-ஆம் தேதி - இரவு 8:30 மணிக்கு
இடம் : கலீபா
இந்தியாவிற்கு அவமானம்...
வெறும் 3.7கோடி மக்கள் தொகை கொண்ட மொராக்கோ உலகக்கோப்பை கால்பந்தில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 140கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறவில்லை. இது இந்தியாவிற்கு அவமானம் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.